districts

ஜம்புகல் மலை ஆக்கிரமிப்பை அகற்ற வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு

திருப்பூர், மே 5 - திருப்பூர் மாவட்டம், உடுமலை வட் டம் ஆண்டியக்கவுண்டனூர் கிராமத் தில் ஜம்புகல் மலை தனியார் ஆக்கிர மிப்பை அகற்றுமாறு மாநில வனத் துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு  அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடுமலை பெரும் பள்ளம் அமராவதி நகரைச் சேர்ந்த வி. சின்னராஜ், கே.ஈஸ்வரன் உள்ளிட்டோர் வனத்துறை அமைச்சரிடம் வெள்ளி யன்று அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: ஜம்புகல் மலை சுமார் 2 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவு கொண்டது. இம்மலை  பகுதிகளில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக உள்ள மண் பாங்கான சுமார்  500 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதல்வர்  கருணாநிதி ஆட்சிக் காலத்தில் முதல்  முறையாக பல்வேறு சமூக மக்களுக்கு  விவசாயம் செய்ய பட்டா வழங்கப்பட் டது. அரசிடம் இருந்து பட்டா பெற்றுக்  கொண்ட மக்கள் தங்கள் வாழ்வாதா ரத்தில் அச்சாணியாக இந்த மலைப் பகு தியில் தங்கள் பட்டா நிலத்தில் விவ சாயம் செய்து வந்தனர். நாளடைவில் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களின் காரணமாக விவசாயம்  செய்ய முடியாமல் வேறு தொழில் ஏதும்  செய்ய இயலாத காரணத்தாலும் அவர் கள் ஏழ்மையின் காரணமாக விவசாயக்  கூலிகளாக இடம் பெயர்ந்தனர். இச்சூழ் நிலையில் உடுமலை நகரம் சாய்புரம்  லே அவுட் பகுதியைச் சார்ந்த செந்தில் குமார் என்ற தனிநபர் ஒருவரும், அவர்  சார்ந்த குடும்பத்தினரும் ஒட்டுமொத்த மலையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கின்றனர். இந்த  மலைக்குச் செல்லக்கூடிய வழக்கமான  வழித்தடப் பொதுப் பாதையில் கம்பி வேலி மற்றும் கேட் அமைத்து மற்ற வர்கள் மலையின் உள்செல்ல முடியாத படி தடுப்புகளை ஏற்படுத்தி பொது உரி மையைப் பறித்துள்ளனர்.

இந்த மலை முழுவதையும் தங்கள்  கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு கிரயத்தின் மூலமும், 99 வருட குத்தகை யின் மூலமும் அப்பகுதி மக்களின் ஏழ் மையைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் எழுதி வாங்கியுள்ளனர். மேலும், பலரது விவசாய நிலங்கள் உள்ள நிலையில் அவர்களது விவசாய  நிலங்களுக்குச் செல்ல முடியாத வகை யில் இந்த தனிநபர் ஒட்டுமொத்த மலை யையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார். 200 டன்  மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து பல முறை புகார் அளிக் கப்பட்டும் போராட்டங்கள் நடத்தியும் மேற்கண்ட தனிநபர் செல்வாக்கு மிக்க வர் என்று கூறி தன்னுடைய அரசியல் பின்புலம், அதிகாரத்தால் அச்சுறுத்தி தன் கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளார். எனவே இந்த ஜம்பு கல் மலையை மீட்க உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் எழுதி வாங்கப்பட்ட குத்தகை பத்திரங் களை ரத்து செய்ய வேண்டும், வேலி,  நுழைவாயில் கதவுகள் தடுப்பரண் களை அகற்றவும், மரங்களை வெட்டி யோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள னர்.