உதகை, மார்ச் 15- உதகை அருகே கோவில் திருவிழா வில் கடைகள் அமைத்திருந்த நரிக்குற வர்கள் மீது வனத்துறை ஊழியர்கள் 15க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத் தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலி கள் காப்பகத்திற்குட்பட்ட சிறியூர் வனப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா தற்போது நடை பெற்று வருகிறது. இத்திருவிழாவின் போது நீலகிரி மாவட்டத்தின் உதகை, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்ட கிரா மங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து செல் கின்றனர். இவர்களை மையமாகக் கொண்டு பலதரப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின் றனர். இந்நிலையில் நரிக்குறவர், பழங் குடியினர் இனத்தை சேர்ந்தவர்களும் சிறியூர் மாரியம்மன் கோவில் அருகே கடைகள் அமைத்து வியாபாரம் செய் துள்ளதாக கூறப்படுகிறது. இதனி டையே கடைகளை அகற்றக்கோரி வனத் துறையினர் நரிக்குறவர் இனத்தினரிடம் தெரிவித்ததாகவும், கடைகளை அகற்ற காலதாமதாமகியதால் செவ்வாயன்று இரவு சிறியூர் கோயிலிலேயே தங்கி உள்ளனர். இதனையடுத்து புதனன்று கடை களை அகற்றிவிட்டு, வாகனத்தில் வந்து கொண்டிருந்போது, நடு வனப்பகுதி யில் வாகனத்தை நிறுத்தி வாகனத்திலி ருந்த நரிக்குறவர்களை 15க்கும் மேற் பட்ட வனத்துறை ஊழியர்கள் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இத னைத்தொடர்ந்து இதற்கு தீர்வு காணும் வரை போக மாட்டோம் எனக்கூறி நரிக் குறவர் இன மக்கள் வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வன சோத னைச்சாவடி முன்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி கள், போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என கூறியதைய டுத்து, அனைவரும் கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.