கோவை, அக்.1- உழைக்கும் மக்களின் உரிமைக் காகவும், ஓடுக்கப்பட்ட மக்களின் விடு தலைக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட மார்க்சிஸ்ட் கட்சி யின் முது பெரும் தலைவர் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினம் செப்.30 அன்று நடைபெற்றது. இவரின் நினைவு தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தீண் டாமை கொடுமைக்கெதிரான நேரடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக, அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆனைமலை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தோழர் சீனிவாசராவ் நினைவேந்தல் நிகழ்வு திங்களன்று நடைபெற்றது. பெரிய நாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத் தில், விதொச மாவட்ட துணைத் தலை வர் ஆர்.செல்வராஜ், கோவை வடக்கு பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.கேசவமணி உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதேபோல, ஆனைமலை ஒன்றியத்தில் ஆழியார் புளியங்கண்டியில் நடைபெற்ற நினை வேந்தல் நிகழ்வில், ஆனைமலை ஒன் றிய துணைத்தலைவர் ஆர்.ராமலிங் கம் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஏ.துரைசாமி, மாவட்டப் பொரு ளாளர் கே.மகாலிங்கம் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, திங்களன்று பட்டிய லின மக்களுக்கு பட்டா கேட்டு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் தலை மையிலும், தருமபுரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலை மையிலும் போராட்டம் நடைபெற்றது. முடிவில், பட்டா வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகங்கள் உறுதியளித் தன.