உதகை, ஆக 20- பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட் டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயா ஆர்ப் பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெறும் சத்து ணவு ஊழியர்களுக்கு அகவிலைப் படியுடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். அனைத்து சத்து ணவு ஊழியர்களுக்கும் முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண் டும். சத்துணவு ஊழியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தால் உடனே பிழைப்பு ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட் டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.