districts

img

மஞ்சள் விவசாயத்தில் கவனம்

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு வாழை, சின்னவெங்காயம், தக்காளி, காய்கறி வகை கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் வட்டத்தில் சாகுபடி செய்யப்படும் விளைப் பொருட்கள் கோவை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களுக் கும், அதிகளவு கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப் படுகிறது.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தட்பவெப்ப நிலை மாற்றம், வன விலங்குகளால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. மேலும் தக்காளி மற்றும் சின்னவெங்கா யம் அதிகளவும் சாகுபடி செய்யப்பட்டும் போதிய விலை  கிடைக்காததால் டன் கணக்கான தக்காளி விவசாய நிலத்தி லேயே உரமாக்கப்பட்டது. சின்ன வெங்காயமும் வியாபாரி கள் வாங்க வராததால் பட்டரையிலே வைக்கப்பட்டு சூட்டில்  அழுகி வீணாகியது. அதே போல அடிக்கடி தொண்டாமுத் தூர், நரசீபுரம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி, கரடிமடை,  காருண்யா, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட வன எல்லையோர கிராமங்களுக்கு உணவு தேடி உலா வரும் காட்டு யானை கள் விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு, விவசாய பொருட்களையும் உடைக்கிறது. மற்றொரு புறம் காட்டு பன்றிகள் நிலத்தை பாழக்கி, காய்கறிகளை வேட்டையாடி வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே தொண்டா முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் பாக்கு மற்றும் மஞ்சள்  விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு காலத் தில் தொண்டாமுத்தூர் வட்டத்தில் மட்டுமே சுமார் 5 ஆயிரம்  ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த மஞ்சள் போதிய விலை இல்லாத தாலும், அதிக லாபம் வரக்கூடிய பயிர்களை நோக்கிச் சென்ற னர். இந்நிலையில் பல்வேறு பாதிப்புகளால் மீண்டும் மஞ்சள்  சாகுபடியில் விவசாயிகள் இறங்கத் துவங்கியுள்ளனர். மீண் டும் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் 500 ஏக்கரில் மஞ்சள் சாகு படி செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த  10 ஆண்டுகளுக்கு முன் கோவை தொண்டாமுத்தூர் வட் டத்தில் மட்டும் 5 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப் பட்டது. மேலும் மஞ்சள் நீண்ட கால பயிர் பராமரிப்பு செலவு களும் குறைவு, அதே போல வாழை போல நிலையான பயிர் என்பதால் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் பல ஆண்டுகளாக விலையில் ஏற்றம் இல்லாமல் குவிண்டால் ரூ.7,500க்கு மட்டுமே விற்பனையாகி வந்தது. 20 டன் அளவிற் கான சாகுபடி இருந்தும் போதிய விலை இல்லாததால் மஞ்சள் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், வனவிலங்குகள், சந்தை மதிப்பு குறைந் தால் வேறு வழியின்றி மீண்டும் விவசாயிகள் மஞ்சள் விவசா யத்தில் கவனம் செலுத்தி வருகின்றோம். தற்போது குவிண் டால் ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மேலும் மஞ் சளை வன விலங்குகள் உண்ணாது என்பதால் பாதிப்பு குறை வாக உள்ளது. மேலும் ஊடுபயிராக சின்னவெங்காயமும் பயிரிடுகிறோம். நீண்ட ஆண்டுகளுக்கு பின் 500 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது, என்றனர்.