உதகை, செப்.29- ஊட்டி அரசு தாவரவியல் பூங் காவில் இரண்டாவது சீசனுக்காக மலர் மாடங்களில் பூந்தொட்டி களை அடுக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலைகளின் அரசி என்று புகழப் படும் சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப் ரல் மற்றும் மே மாதம் முதல் சீசன் ஆக கடைபிடிக்கப்படுகிறது. முதல் சீசனின் போது வெளி மாநி லம் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பய ணிகள் வருவது வழக்கம். இத னையொட்டி, ஊட்டி அரசு தாவரவி யல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இரண்டா வது சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தாவரவி யல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மலர் கண்காட்சி நடத்தாத போதிலும், மலர் அலங் காரங்கள் காட்சிபடுத்தப்படும். இதற்காக ஆண்டுதோறும் 5 லட்சம் மலர் செடிகள் பூங்கா முழுவதும் நடவு செய்யப்படும். மேலும் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு மாடங்களில் சுற் றுலாப் பயணிகளில் பார்வைக்காக அடுக்கி வைக்கப்படும். இந்நிலையில், இரண்டாவது சீசனுக்காக கடந்த ஜூலை 26 ஆம் தேதி பூங்காவில் நடவு பணிகள் தொடங்கியது. கொல்கத்தா, காஷ் மீர், பஞ்சாப், பூனே போன்ற இடங்க ளில் இருந்து இன்கா மேரி கோல்ட், காஸ்மஸ், பேன்சி , பெட்டூனியா, ஜினியா, ஸ்வீட் லில்லியம், அஜி ரேட்டம், காலண்டூலா, ஹெலிக்கி ரேசம், சப்னேரியா போன்ற 60 வகை களில் பல்வேறு வகையான விதை கள் கொண்டு வரப்பட்டு, தயார் செய்யபட்டு சுமார் 5 லட்சம் மலர் செடிகள் பூங்கா முழுவதும் நடவு செய்யபட்டது. மேலும் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா போன்ற 30 வகையான செடிகள் 15,000 தொட்டிகளில் நடவு செய் யபட்டன. இந்தநிலையில் தற் போது இரண்டாவது சீசன் தொடங்க உள்ள நிலையில், பூங்கா வில் பூத்து குலுங்கும் மலர்கள் அடங்கிய பூந்தொட்டிகளை மலர் மாடத்தில் அடுக்கும் முக்கிய பணிகள் வெள்ளியன்று தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த 2 நாட்களில் இந்த பணி கள் நிறைவுபெறும். மலர் மாடங்க ளில் அடுக்கப்பட்டுள்ள மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்து உள்ளது. மேலும் மலர் தொட்டிகளில் பல மஞ்சள், நீளம், சிவப்பு உள்ளிட்ட வண்ண மலர்கள் பூத்துள்ளன. குறிப்பாக ஒரே செடியில் பூத் துள்ள 2 வண்ண மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள் ளது.