நாமக்கல், பிப்.13- பள்ளிபாளையம், வெப்படை செல்லும் வழியில், அடிக் கடி விபத்து நடைபெறுவதால் வேகத்தடுப்பு அமைக்க வேண்டும் என தீக்கதிர் நாளிதழில் விரிவின செய்தி வெளி வந்த நிலையில், காவல்துறையினர் விபத்து நடைபெறும் அப் பகுதியில் இரும்பு டிவைடர் தற்காலிகமாக அமைக்கப் பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சங்ககிரியை இணைக்கும் முக்கிய சாலையாக வெப்படை செல்லும் வழி யில், பிள்ளையார் காட்டூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்நி லையில் நகரின் மிக முக்கிய சாலையாக உள்ள இந்த பகுதியில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இத னால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது வேக தடுப்பு இரும்பு டிவைடர்கள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் தொடர் கோரிக்கையாக இருந்து வந்தது. இது குறித்து நமது தீக்கதிர் நாளிதாழிலும் செய்தி வெளியானது. இதனையடுத்து பள்ளி பாளையம், வெப்படை காவல்துறையின் சார்பில் விபத்து அதிகம் நடைபெறும் பகுதியில் இரும்பு டிவைடர் தற்கா லிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தற்காலிக ஏற்பாடு என்றில்லாமல் நிரந்திரமான வேகத்தடைகள் அமைக்க வேண்டும். எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என அப்பகுதியில் கோரிக்கை வைத்துள்ளனர்.