districts

img

நெல்லை சாலை விபத்தில் சிக்கி 5 பேர் பலி

நெல்லையில் சாலை விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து என்ற இடத்தில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இந்த சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியவிபத்தில் காரில் இருந்த 5 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.