districts

img

இந்திய குடிமை பணிகள் முதல் நிலை தேர்வு கோவையில் 50 சதவிகிதம் பேர் எழுதவில்லை

கோவை, ஜூன் 5- கோவையில் இந்திய குடிமை பணி கள் முதல் நிலை போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 50 சதவி கிதம் பேர் தேர்வு எழுதவில்லை.  மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் மேற்கொள்ளப்படும் இந்திய குடிமை பணிகள் முதல் நிலை போட்டித்தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. கோவை மாவட்டத் தில் 24 தேர்வு மையங்களில் இத் தேர்வு நடைபெற்றது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.தலைமையில் துணை ஆட்சி யர் நிலையில் 8 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 24 தேர்வு மையங்களுக்கு தேர்வு மைய ஆய்வு அலுவலர்களும், துணை வட்டாட்சியர் நிலையில் 40  தேர்வு மைய துணை கண்காணிப்பா ளர்களும், 414 வரை கண்காணிப்பாளர் களும் மாவட்ட நிர்வாகத்தால் நிய மனம் செய்யப்பட்டனர். இந்த தேர்வா னது முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் உக்கடம், கவுண்டம்பாளை யம், சிங்காநல்லூர், சூலூர், பொள் ளாச்சி போன்ற புறநகர் பேருந்து நிலை யங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் மாவட்ட தேர்வு மையங்களுக் கும் பேருந்து வசதியை அரசு போக்கு வரத்து கழகம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. முன்னதாக. கோவை நிர்மலா மக ளிர் கல்லூரி மையத்தில் நடைபெற்ற தேர்வு மையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட் டார். இந்த தேர்வினை 24 மையங்களில் 9 ஆயிரத்து 447 பேர் எழுத விண்ணப் பித்திருந்த நிலையில், 4 ஆயிரத்து 705 பேர் (49.8 சதவிகிதம்) மட் டுமே எழுதினர். 4 ஆயிரத்து 741 (50.2 சதவிகிதம்) பேர் தேர்வை எழுத வில்லை.