districts

தீ தடுப்பு கோடு - வனத்துறையினர் தீவிரம்

உதகை,பிப்.6- முதுமலை புலிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்து றையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீ தம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை உறை பனி, நீர்பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படும். இதனால் வனப்பகுதிகளில் உள்ள மரங்கள், புற்கள் என அனைத்தும் காய்ந்து கருகி காட்சியளிக்கும். இத னால் வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டு  பல ஏக்கர் தீயில் கருகி விடும். இந்நிலையில் காட்டுத்தீ ஏற்ப்படாமல் இருக்கும் வகையில் உதகையில் இருந்து  முதுமலை செல்லும் கல்லட்டி மலைப்பாதை மற்றும் மசின குடி முதல் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வரை  தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர், வேட்டை காவலர்கள், தீ தடுப்பு குழுவினர் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பதற்கான தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில், சாலையோரத்தில் இருந்து 20 மீட்டர் தூரத்திற்கு தீ மூட்டி அதை அனைத்து ஒத்திகை மேற்கொண்டனர். மேலும் தற்போது வறட்சி காலம்  என்பதால், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வாகனங் களை நிறுத்த கூடாது எனவும், புகைப்பிடிக்க கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிததுள்ளனர். மீறுபவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித் துள்ளனர்.