districts

img

திருச்செங்கோடு: வீட்டில் தீ விபத்து

நாமக்கல், பிப்.10- திருச்செங்கோட்டில் சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் வைத்தி ருந்த ஓட்டு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.2 லட்சம் மதிப் பிலான பொருட்கள் சேதமடைந்தன. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, 31  ஆவது வார்டுக்குட்பட்ட கரட்டுப்பாளையம் போயர் தெரு வில், பழனியப்பன் என்பவர் சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் தொழிலுக்கு பயன்படுத்த  வயர்கள், போக்கஸ் லைட்டுகள், தரை விரிப்புகள் ஆகிய வற்றை அங்குள்ள தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் பூட்டி  வைத்திருந்தார். இந்நிலையில், திடீரென அந்த ஓட்டு வீட்டிலி ருந்த புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட  அக்கம் பக்கத்தினர் பழனியப்பனுக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்புத்துறை நிலை அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த தீய ணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக் குள் கொண்டு வந்தனர். இவ்விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப் பிலான பொருட்கள் சேதமடைந்தன.