கோவை, நவ.20- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர் சங்கத்தினர், கோவை யில் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பொதுவிநியோகத்தை பலப்படுத்த வேண்டும். கொள்முதல் பணியை தனி யாரிடம் வழங்கக் கூடாது. காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஒப்பந்தமுறையை கைவிட வேண்டும். ஒப்பந்தமுறையில் பணிபுரிந்த சுமைப் பணி தொழிலாளர்களுக்கு 2023- 2024-க்கு உரிய போனஸ் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள்வாணி பக்கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற கோரிக்கை விளக்க ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலை வர் என்.ராமன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எம்.ஏழு மலை, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மண்டலச் செய லாளர் எம்.திருக்குமார் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். முன்னதாக மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி டிசம்பர் மாதம் கோட்டை நோக்கி பேரணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.