districts

img

கராத்தே சீருடையில் வேட்புமனு தாக்கல்

திருப்பூர், மார்ச் 22- திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று கராத்தே மாஸ்டர் ஒரு வர், கராத்தே சீருடை அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். திருப்பூர் நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது.  கடந்த இரண்டு நாட்களாக எந்த ஒரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.  இந்நிலையில் மூன்றாம் நாளான வெள்ளியன்று காலை திருப்பூர் தொட்டி பாளையத்தைச் சேர்ந்த வெங்கடசாமி என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு  மனு தாக்கல் செய்தார். இதேபோல நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்ட மன்ற தேர்தல் என 10 தேர்தல்களை சந்தித்த ஈரோடு அந்தியூரை சேர்ந்த  ஷேக் தாவுத் என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.  இதைத்தொடர்ந்து இதே போல திருப்பூர் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரங்கசாமி என்பவர் கராத்தே உடை அணிந்து கராத்தே செய்து காண் பித்தடியே மனு கொடுக்க வந்திருந்தார். மாவட்ட  ஆட்சியர் வளாகத்தில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை கராத்தே செய்தபடியே சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.