கோபி, மார்ச் 6- கோபி அருகே உள்ள பாரியூரில் வேளாண்துறை சார்பில் வயல் விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பாரியூர் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் சார்பில், வயல் விழா நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் முரளி தலைமையில் நடைபெற்ற இவ்விழா வில், நெல் சாகுபடியில் புதிய நெல் ரகங்கள், சாகுபடி முறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறை, மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது. இதில், பவானிசாகர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி அமுதா, மண்ணியல் துறை விஞ்ஞானி பிரேமலாதா ஆகியோர் உரையாற்றினர்.