districts

img

கடைகளுக்கு பெயர் மாற்ற அனுமதி வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

வேலூர், ஜன.4- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு வேலூர் மாவட்டம் சார்பில், கடை களுக்கு பெயர் மாற்ற அனுமதி வழங்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.  வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற கடிதம் அனுப்பும் நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் இரா.ப.ஞானவேலு தலைமை தாங்கினார். பொருளாளர் அமீன் அகமது ஆலியார், இளைஞரணி செயலாளர் அருண் பிரசாத், நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் எல்.கே.எம்.பி. வாசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில், தமிழகத்தில் உள்ள கடை களை ஒருமுறை மட்டும் பெயர் மாற்றம் செய்யலாம் என்று 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 92 ஆம் அரசாணை யில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடையின் பெயர் ஒரு முறை மாற்றம் செய்வது அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கடையின் பெயரை ஒரு முறை மாற்றம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். அதேபோன்று கடைகளுக்கு ஆண்டுதோறும் 5 விழுக்காடு வாடகை உயர்வு என்பதை தவிர்த்து பழைய முறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 விழுக்காடாக வாடகையை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரி வித்திருந்தனர்.