ஈரோடு, செப்.17- தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில் சமூக நீதி கூட்டமைப்பின் சார்பில் ஞாயிறன்று சனாதன எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. இத னையொட்டி, ஈரோட்டில் சமூக நீதி கூட்ட மைப்பு சார்பில் சனாதன எதிர்ப்பு பேரணி நடத்த அழைப்பு விடுத்தது. அதன்படி, ஞாயி றன்று சம்பத் நகரில் தொடங்கிய இந்த பேரணி ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி யின் தலைமையில் பறையிசையுடன் சனா தன எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியபடி நடை பெற்றது. சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளும் இடம்பெற்றன. நசியனூர் சாலை மற்றும் பிரப் ரோடு வழியாக பன்னீர் செல் வம் பூங்காவை அடைந்தது. அங்கு திமுக தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் செந் தில் சனாதன எதிர்ப்பு உறுதிமொழி வாசித் தார். அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள் ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோன்று, தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினை வகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட வருவாய் அலு வலர் ச.சந்தோஷினி சந்திரா, வருவாய் கோட் டாட்சியர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந் தனர்.
திருப்பூர்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருப்பூரில் தந்தை பெரியாரின் பிறந்தநாள், சமூக நீதி நாளாக கொண்டா டப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், துணைச்செயலா ளர் எஸ்.சண்முகம், மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ந.சஞ்சீவ் உள்ளிட் டோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத் தினர். இதன்பின், சமூக நீதி உறுதிமொழி ஏற்கப் பட்டது. இந்நிகழ்வில் தையல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வேல்முரு கன், வாலிபர் சங்க நிர்வாகி ஜீவா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திராவிடர் விடுதலைக் கழ கம் சார்பாக பேரணி நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து துவங் கிய பேரணியை முற்போக்கு சிந்தனையா ளர் பாரதி சுப்பராயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குழந்தைகள், பெண் கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். முடி வில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக பெரியார் சிலை அருகில் நிறைவடைந்தது. அங்கு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு, திராவிட விடுதலைக் கழக மாநிலப் பொருளாளர் சு.துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ஆதித் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செய லாளர் விடுதலைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.