districts

img

மின் இணைப்பு துண்டிக்க எதிர்ப்பு - விவசாயிகள் சாலை மறியல்

உடுமலை, மே 6- எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண் டித்த அதிகாரிகளை கண்டித்து உடுமலை பிஏபி கால்வாய் அருகே விவசாயிகள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு (பிஏபி)  பாசனத் திட்டத்தில் முறை கேடாக தண்ணீர் திருடுவது குறித்து, கூட்டுக்குழு அமைத்து முறைகேடுகளை தடுக்க வேண் டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், பிர தான மற்றும் கிளைக் கால்வாய் களுக்கு  50 மீட்டருக்குள் இருக்கும் கிணறு,போர்வெல்களின் மின் இணைப்பை துண்டித்து அவற்றை மூடவும், வழக்கு பதிவு செய்யவும்  அறிவுறுத்தப்பட்டுள் ளது. நீதிமன்ற உத்தரவினை அடுத்து, கால்வாய்களில் நேர டியாக சைடு போர் அமைத்து நீர் திருடுவது, கால்வாயின் அருகில் சிறிய நிலம் வாங்கி, ஆயக்கட்டு அல்லாத பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு நீர் கொண்டு செல் வது, வணிகம் அல்லது தொழிற் சாலைகளுக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகேடுகளை கண் டறிந்து நடவடிக்கை எடுக்க குழுக் கள் அமைத்து திருப்பூர், கோவை மாவட்ட நிர்வாகத்தினர் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உடுமலை பகு தியில் கோட்டாச்சியர் கீதா, பிஏபி செயற்பொறியாளர் கோபி, உதவி கோட்டப் பொறியாளர் காஞ்சித் துறை, உதவிப்பொறியாளர் விஜயசேகர், மின்வாரியம், காவல் துறை கொண்ட கூட்டுக்குழு அதி காரிகள் உடுமலை கால்வாய் பகு தியில் ஆய்வு செய்து, கால்வா யின் இருபுறமும், விதிமீறி இருந்த கிணறுகள் மற்றும் போர்வேல்க ளுக்கு வழங்கப்பட்டிருந்த, விவ சாய மற்றும் வணிக மின்  இணைப்புகளை முன்னறிவிப்பு இன்றி துண்டித்தனர். முதற்கட்ட மாக 32 மின்இணைப்புக்களை துண்டித்தனர். முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவ டிக்கையால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள், உடுமலை அருகே போடி பட்டி அண்ணாநகர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், உடுமலை -மூணாறு பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர்.  இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதா வது, நாங்கள் பல ஆண்டுகளாக விவசாய பயன்பாட்டிற்காக கிண றுகள் அமைத்து முறையாக மின் இணைப்பு பெற்று கால்நடை மற் றும் விவசாயப் பயன்பாட்டிற்காக மட்டும் பயன்படுத்தி வருகி றோம். ஒருசிலர் வணிக பயன் பாட்டிற்காக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் அவர்களை கண்ட றிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், நீதி மன்ற தீர்ப்பை காரணம் காட்டி ஏழை, எளிய நடுத்தர விவசாயி களை ஒடுக்கும் நோக்குடன் அதி காரிகள் செயல்படுவதை ஏற்க முடியாது என்றனர்.  மேலும், விவசாய பயன்பாட் டிற்கு முறையான மின் அனுமதி பெற்ற மின் இணைப்பை துண் டிக்க, பொதுப்பணித்துறை  அதி காரிகள் அடங்கிய கூட்டுக்குழு வினர் மேற்கொண்டால், பிஏபி  பாசனத்திற்காக அணை கட்டுவ தற்கு மற்றும் பாசன கால்வாய் கள் செல்ல  விவசாயிகள் அளித்த நிலத்தை திருப்பி விவசாயிக ளிடமே வழங்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர்.  

இதனையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த பிஏபி செயற்பொறி யாளர் கோபி, போராட்டத்தில் ஈடு பட்ட விவசாயிகளிடம் விவசாய பயன்பாட்டில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை தற்காலிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதி அளித்தார். இதனை யடுத்து , விவசாயிகள் சாலை மறி யல் போராட்டத்தை கைவிட்ட னர்.  முன்னதாக, உடுமலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையில் உடுமலை, மடத்துக்குளம், குடி மங்கலம், தளி என நான்கு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராள மான காவல்துறையினர் அப்பகுதி யில் குவிக்கப்பட்டதால் அப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.