பள்ளிபாளையம், மே 7- இளம் பெண்ணை பாலியல் வன் கொலை செய்த உண்மை குற்றவாளி களை கண்டறிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஞாயிறன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகில் உள்ள கரைப்பாளையத்தைச் சார்ந்த பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் 3 ஆம் தேதியன்று சமூக விரோதி களால் பாலியல் வன்கொலை செய்யப் பட்டார். இக்குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மொளசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் கே.பூபதி தலைமை ஏற்றார். வழக்கறிஞர் என்.கார்த்திகேயன், தமிழ் நாடு விவசாய சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஏ.ஆதிநாராயணன், மாவட்ட செயலாளர் பி.பெருமாள், மாவட்ட பொருளாளர் இ.கோவிந்த ராஜ், மாவட்ட உதவி தலைவர் ஆர். வேலாயுதம், சமூக செயல்பாட்டா ளரும், கரும்பு விவசாயிகள் சங்க எம். காத்தவராயன், வடிவேல், பழைய பாளையம் பூபாலன் பூபதி, மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் சண்முகம், ஜேடர்பாளையம் கிருஷ்ணன், கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், இளம் பெண் பாலியல் வன்கொலை வழக்கை சிபிசிஐடி-க்கு விசாரணைக்கு உட்படுத்தி உண்மையான குற்றவாளி கள் கைது செய்ய வேண்டும். காவல் துறையினரால் அப்பாவி மக்களை மிரட்டி பொய் வழக்கு போடுவது நிறுத்தப்பட்டு, சிறையில் உள்ளவர் களை விடுதலை செய்யப்பட வேண்டும். விவசாய பணிகளில் ஈடு படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.