தாராபுரம், மார்ச் 25 - உயர்மின் கோபுரம் திட்டங்களால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பவர் கிரீட் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களின் உயர்மின் கோபுரம் திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இழப்பீடு வாழங்கப்படாமல் நிலுவையில் உள் ளது. இதனிடையே நில இழப்பீடு, பயிர்கள் மற்றும் தென்னை மரங்களுக்கான இழப் பீட்டை வழங்க வலியுறுத்தி தாராபுரம், காங் கேயம் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட விவசாயிகள் தாராபுரம் கோட்டாட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த னர். அதன்படி போராட்டத்தில் ஈடுபட வந்த வர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத் தினர். பின்னர் மனு கொடுக்க அனுமதி வழங் கினர். இதையேற்று கோட்டாட்சியர் குமரே சனிடம் மனு அளித்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கை களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனே நிவர்த்தி செய்து தருவதாக கோட்டாட்சியர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் தெரி விக்கையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காங்கேயம் பகுதிகளில் உயர்மின் கோபு ரம் அமைத்து அந்த இடத்திற்கு இழப்பீடு தரா ததால் கோட்டாட்சியர் அலுவலகம் முற்று கையிட வந்தோம். பேச்சு வார்த்தைக்கு பிறகு உடனே சரி செய்து தருவதாக தெரிவித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு உள்ளோம். அதிகாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற காலதாமதம் செய்தால் மீண் டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரி வித்தார்.