மேட்டுப்பாளையம், டிச. 10- மலையடிவார கிராமங்களில் புகுந்து கன்றுக்குட்டிகளை வேட்டை யாடும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க கோரி விவசாயிகள் இறந்த கன்றுக்குட்டியோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அடுத்துள்ள காரமடை முத்துகல்லூர் பகுதியில் தோகை மலை பகுதியை சேர்ந்தவர் விவ சாயி கருப்பசாமி. இவர் விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வரும் நிலையில், இவரது தோட்டத்தில் வெள்ளியன்று இரவு கட்டி வைக்கபட்டிருந்த இரண்டு வயது பசுமாட்டு கன்றினை சிறுத்தை யொன்று கடித்து கொன்றுள்ளது. சனியன்று காலை இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி கருப்ப சாமி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், வனத்துறை யினர் வர தாமதமானதால் கோப மடைந்த அப்பகுதி விவசாயிகள் அலட்சியமாக செயல்படும் வனத் துறையை கண்டித்தும், கடந்த பல மாதங்களாக 15 திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடி கொன்று வரும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வலியு றுத்தியும் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். காரமடை- தாயனூர் சாலையில் உயிரிழந்த கன்று குட்டியோடு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரமடை காவல் துறை மற்றும் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேட்டுப் பாளையம் வட்டாட்சியர் மாலதி முன்பு நடைபெற்ற இப்பேச்சு வார்த் தையில், கால்நடைகளை தாக்கும் சிறுத்தைகளை பிடிக்க உடனடி யாக கூண்டு வைக்க ஏற்பாடு செய் யப்படும் என உறுதியளிக்கப்பட்ட தையடுத்து போராட்டத்தை கை விட்ட விவசாயிகள் கலைந்து சென்ற னர். உறுதியளித்தபடி வனத்துறை யினர் செயல்பட தவறினால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவ சாயிகள் தெரிவித்தனர்.