districts

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி: விவசாயிகள் அதிர்ச்சி

நாமக்கல், பிப்.1- திருங்செங்கோடு அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருங் செங்கோடு ஒன்றியம், அணிமூர் கிராமம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அன்புக்கொடி. இவர் கடந்த 2017 ஆண்டு தமிழ்நாடு அரசின் ஆடு வளர்க்கும் திட்டத் தின் மூலம் 4 செம்மறி ஆடுகளை பெற்று வளர்த்து வந்தார். அது பெருகி தற்போது அன்புக்கொடி 16 ஆடுகளை, தனது வீட்டு அருகில் இரண்டு பட்டியில் அடைந்து வளர்த்து வந்தார். இந்நிலையில், இரவு நேரத்தில் ஆடுகள் அலறும்  சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, கூட்டமாக நாய்கள் ஒன்று சேர்ந்து கட்டி போட்டிருந்த ஆடுகளை கடித்துக்குதறியது தெரியவந்தது. இதில் ஒரு பட்டி யில் இருந்த 8 ஆடுகள் இறந்து போய் கிடந்தன. அடுத்த பட்டியில் அதே நாய்கள் ஆடுகளை கடித்துக் கொண்டிருப்பதை கண்டு நாய்களை அன்புக்கொடி விரட்டி னார். 8 ஆடுகள் ரத்த வெள்ளத் தில் உயிரிழந்து கிடந்த நிலையில், 7 ஆடுகள் காயங்களுடன் உயிர் தப்பின. இறந்து போன ஆடுகளின் மொத்த மொத்த மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் என அன்புக்கொடி தெரிவித்துள்ளார். நகராட்சி பகுதியில் பிடிக்கப் படும் நாய்கள் கருத்தடை செய்யப் பட்டு கொண்டு வந்து விடப்படுவ தால் தான், இந்த பகுதியில் நாய்களின் பெருக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த நாய்கள் உணவு தேடி ஊருக்குள் வந்து சிறுவர், சிறுமிகள், பெரியவர்களை ஏற்கனவே பலமுறை கடித்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் அன்புக்கொடி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் புகாரளித்தனர். இந்நிலையில், அன்புக்கொடி குடும்பத்தாரை சந்தித்த திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில், அவருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.