சேலம், நவ.28- மின்சார சட்டத்திருத்த மசோதா – 2022யை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய சங் கங்கள் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசாங்கம் தொடர்ந்து மக்கள், தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை இயற்றி வருகிறது. குறிப்பாக, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதர வான வகையில் பல்வேறு சட்டங்களை அமல் படுத்தப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதி யாக இயற்றப்பட்ட மின்சார சட்டத்திருத்த மசோதா – 2022யை திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றியதை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலை உயர்வை கட்டுப்படுத்தி, அத்தி யாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழில் சமூக சட் டப் பாதுகாப்பை வரையறை செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங் கள், விவசாய சங்கங்கள் சார்பில் செவ் வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஐஎன்டி யுசி மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு சாலை போக்குவ ரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ். கே.தியாகராஜன், சிஐடியு மாவட்டச் செய லாளர் கோவிந்தன், மாவட்டத் தலைவர் உத யகுமார், பன்னீர்செல்வம், எல்பிஎப் செய லாளர் பொன்னி.பழனியப்பன், ஐக்கிய விவ சாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் ஏ.ராமமூர்த்தி, நடராஜன், எச்எம்எஸ் கணேசன், ஏஐசிசிடியு பாலு, ஏஐ டியுசி முருகன்,
விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி சின்னராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்பு மணி, மாவட்டச் செயலாளர் சண்முகராஜா, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே.மணி, மாவட்ட துணைத்தலைவர் சுதர்சனம், காங்கி ரஸ் மாவட்டத் தலைவர் சிவலிங்கம், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் அர்சுணன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சி.முரு கன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை ஆட்சியர் அலுவலகம் அரு கில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் கே.மனோகரன், ஏஐடியுசி மாநில நிர்வாகி எம்.ஆறுமுகம், எச்எம்எஸ் டி.எஸ். ராஜாமணி, எல்பிஎப் பா.மணி, எம்எல்எப் மு.தியாகராசன், ஏஐசிசிடியு க.பாலசுப்ரமணி யன், எஸ்டிடியு ரகுபுநிஸ்தார், எல்டியுசி மணிகண்டன் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னனியின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் வி.ஆர்.பழனிச்சாமி, சு.பழனிச்சாமி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.