districts

img

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நம்பிக்கை அளிப்பதாக இல்லை

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்க மறுப்பு குறைதீர் கூட்டத்தில் புகார்

ஈரோடு மாவட்ட விவசாயிகள் மாதாந்திர குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட  வருவாய் அலுவலர் சந்தோசினி சந்திரா தலைமை வகித் தார்.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட  செயலாளர் ஏ.எம்.முனுசாமி உள்ளிட்ட ஏராளமான  விவசாயிகள், விவசாய சங்கங்கள் பங்கேற்றன. இதில் அந்தியூர் வட்டத்தில் அத்தாணி, கெட்டி சமுத்திரம் அந்தியர் நில குடியேற்ற கூட்டுறவு சங்கம்  செயல்படுகிறது. இந்த சங்கங்களின் உறுப்பினர் இறந்து  விட்டால் அவர் மூத்த மகன் தான்மீண்டும் சங்க உறுப்பின ராக வேண்டுமென்ற விதி இருந்தது. இதனால் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த வாரிசுதாரர்கள் மத்தியில் சண்டை, சச்சரவு  ஏற்பட்டு வந்தது.  அதுமட்டுமின்றி அந்த விவசாயிகளுக்கு அரசு மானியம், வங்கி கடன் உள்ளிட்ட அரசு சலுகைகள் எதுவும்  கிடைப்பதில்லை. மின் இணைப்பு பெறுவதில் சிரமம் உள்ளது. நிலம் வழங்கி 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. விவசாயிகளின் வாரிசுகள் 1500 பேர் உள்ளனர். அவர் களில் சாகுபடி செய்பவர்கள் பெயரில் பட்டா வழங்க  வேண்டும்.  இதேபோன்று, கோபி வட்டம், நஞ்சை கோபி  கிராம விவசாயிகளுக்கு பாரியூர் வெள்ளாள பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100  ஆண்டுகளாக பயிர் கடன், இதர கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி இக்கிராமத்தில் வசிக்கும் மக்க ளுக்கு இந்த சொசைட்டி நிர்வாகத்தின் மூலம் ரேசன் கடை  நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கூட்டுறவு துறையி லிருந்து இனி உங்களுக்கு லோன் கிடையாது என்று  கூறிவிட்டார். காலம் காலமாக இருந்து வந்த நடைமுறைப் படி கடன் உள்ளிட்ட சேவைகள் தொடர்ந்து வழங்க  வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற் கான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர்.  இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சக்தி சர்க்கரை ஆலையின் செயலாளர் கார்த்திகேயன், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சத்தியமங்கலம் தாலுகா  தலைவர் வி.கணேஷ், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

கோவை, அக்.28 -  விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் உரிய உத்தரவை பிறப்பித் தாலும், அதிகாரிகள் அலட்சியப்படுத் துவதால் விவசாயிகளின் மனுக் களுக்கு தீர்வு எட்டப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. ஆகவே விவசாயிகள் குறை தீர் கூட்டம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடைபெற வேண்டும் என் பதை வலியுறுத்தி குறைதீர் கூட்டத் தில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாதத்தின் கடைசி வாரத்தில்  விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடை பெறும். ஆட்சியர் தலைமையில் நடை பெறும் இக்கூட்டத்தில் பல்துறை சார்ந்த  அதிகாரிகள் பங்கேற்பர். இதில், விவ சாய சங்கத்தினர், விவசாயிகள் பங் கேற்று தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்களாகவும், கோரிக்கை களாகவும் முன்வைப்பர். இதனை சம் பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவை பிறப்பிப்பார். இந் நிலையில் வெள்ளியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவ சாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன் தலைமையில் துவங் கியது. அப்போது, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட  தலைவர் வி.பி.இளங்கோவன், ஆறுச் சாமி, ராஜா, காளப்பன் உள்ளிட்ட   சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரின்  கவனத்தை ஈர்க்கும் வகையில், நம்பிக்கை இல்லாத இந்த குறைதீர்  கூட்டத்தில் இருந்து நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம் என்றனர். மேலும்,  வெளிநடப்பிற்கான காரணத்தையும் எழுத்துப்பூர்வமாக ஆட்சியரிடம் அளித்துவிட்டு வெளியேறின

அதில், விவசாயிகள் குறைதீர் கூட் டத்தில் பெறப்படுகிற மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை யோடு விவசாயிகள் வருகின்றனர். மனுக்களையும் அளித்து, மன்றத்திலும்  பேசுகின்றனர். இதனை புரிந்து கொண்டு ஆட்சியரும் உரிய உத்தரவை  பிறப்பிக்கிறார். ஆனால், அதிகாரிகள்  இந்த உத்தரவுகளை பின்பற்றுவ தில்லை. சம்பந்தமில்லாமல் பதில் கடி தங்களை அனுப்புகின்றனர். பல  ஆண்டுகளாக அலைந்தும் பிரச்ச னைகள் தீராமல் விவசாயிகள் வேத னையடைந்து வருகின்றனர். 40 ஆண்டு களாக கழிவுநீரை அகற்றாமல் சிங்கா நல்லூர் குளம் உள்ளது. இதனை தூர்  வார வேண்டும். கழிவுநீரை வெளி யேற்றி நொய்யல் ஆற்று நீரை கொண்டு  நிரப்ப வேண்டும் என தொடர்ந்து வலியு றுத்தி வருகிறோம். இதேபோன்று பாரதி யார் பல்கலைக் கழகத்திற்கு நிலம்  கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மலைவாழ் மக்களின்  நிலத்தை ஈஷா யோகா மையம் அபக ரித்துள்ளது. இதனை மீட்டு சம்பந்தப் பட்ட மலைவாழ் மக்களுக்கு வழங்க  வேண்டும் என தொடர்ந்து மனு கொடுத்தும், போராட்ட இயக்கங்கள் நடத்தியும் எந்த தீர்வும் இதுவரை எட்டப் படவில்லை. விவசாயிகள் குறைதீர்  கூட்டம் விவசாயிகளுக்கு நம்பிக்கை  ஏற்படுத்துகிற வகையில் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த வெளி நடப்பை செய்வதாக தெரிவித்திருந் தனர். 

ஆட்சியர் உத்தரவு

முன்னதாக தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்த தையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் துறைரீதியிலான அலுவலர்கள், வரும் திங்கள்கிழமைக்குள் கிடப்பில் இருக்கும் மனுக்களின் நிலவரம், எடுக் கப்பட்ட நடவடிக்கை குறித்து கண்டிப் பாக தனது கவனத்துக்கு தெரியப் படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 தருமபுரி

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத் திற்கு ஆட்சியர் சாந்தி தலைமை தாங் கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது, தருமபுரி  மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் களிடமிருந்து கொள்முதல் செய்யப் படும் பாலுக்கு வழங்கப்பட வேண்டிய  நிலுவை தொகையை விரைவாக அளிக்க வேண்டும். மாவட்டத்தில் கால் நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட் டங்களை விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க ஒகேனக்கல் காவிரி  உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில்  நிரப்பும் திட்டத்தை விரைவாக செயல் படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டங் களில் சேரும் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்படும்போது நியாயமான இழப்பீடு கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய்  அலுவலர் அனிதா, உதவி ஆட்சியர்கள்  விஸ்வநாதன், ஜெயக்குமார், ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன் உட்பட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.