districts

img

கொரோனா பரவலால் உதகை உழவர் சந்தை இடமாற்றம்

உதகை, ஜன.12- கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், உதகை உழவர் சந்தை என்சிஎம்எஸ் மைதானத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை வேக மாக பரவி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல் கிறது. நீலகிரி மாவட்டத்திலும் தற்போது பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை பல் வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்தல், முகக்கவசம் அணி தல், கை கழுவுதல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், தனிமனித இடைவெளியை பின்பற்ற அனைவரையும் வலியுறுத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. அதன்ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடாமல் இருக்க தற்போது உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இருந்த உழவர் சந்தை, தற்காலிகமாக என்சிஎம்எஸ் மைதானத் திற்கு மாவட்ட நிர்வாகம் மாற்றியுள்ளது. இதையடுத்து உதகை என்சிஎம்எஸ் மைதானத்தில் விவசாயிகள் கடை களை அமைத்து வருகின்றனர். மேலும், இங்கு மக்கள் அதிகம் கூடாத வகையில், கடை கள் தனிமனித இடைவெளி பின்பற்றி கடைகள் வைக்கப் பட்டுள்ளது. இதேபோன்று உதகை மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகம் கூடாத வகையில், பழக்கடைகள் மற்றும்  காய்கறி கடைகள் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் சுழற்றி முறை யில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.