சேலம், நவ.28- வழக்கறிஞர்ள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி சேலத்தில் வழக் கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீதும், திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கறி ஞர்கள் மீதும் காவல் துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்குகளை உடனடியாக திரும் பப்பெற வேண்டும். வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலத்தில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சேலம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு - பாண்டிச்சேரி வழக்கறி ஞர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ஏ.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் இமயவரம்பன், செயலாளர் முருகன், பொருளாளர் கண்ணன் ராஜசேகர் உட்பட 100க்கும் மேற்பட்ட வழக் கறிஞர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.