districts

img

கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு: சம்பவ இடத்தில் உண்மை கண்டறியும் குழு ஆய்வு

கோவை, மார்ச் 28- கோவை நீதிமன்றம் முன்பு பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்ப வம் குறித்து, உண்மை கண்டறி யும் குழுவினர் செவ்வாயன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோவை நீதிமன்ற வளா கத்தில் கவிதா என்ற பெண் மீது  அமிலம் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடைபெற்ற விசார ணையில், கவிதா மீது ஆசிட் வீசி யது கணவரின் வெறிச்செயல் என் பது தெரியவந்து, அவர் கைது செய் யப்பட்டார். மேலும், வேறு ஒரு வழக் கில் விசாரணைக்கு கோவை நீதி மன்றத்திற்கு வந்திருந்த அந்தப் பெண், இதற்கு முந்தைய வழக்கு களில் தொடர்பு படுத்தியவரும் கணவரின் திட்டமிட்ட செயலே என் பது விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதுதொடர்பாக உண்மை கண் டறியும் குழுவினர் கோவை நீதி மன்ற வளாகத்திலும், அப்பெண் ணின் வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மற்றும் பாதிக்கப் பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் விசாரணையை மேற் கொண்டனர். இதில், உண்மை கண்டறியும் குழுவினுடைய மாநில மையத்தி லிருந்து சட்ட உதவி மையத்தின் பொறுப்பாளரான வழக்கறிஞர்  நிர்மலா ராணி, கோவை மாவட்ட உண்மை கண்டறியும் குழுவினு டைய பொறுப்பாளர் வழக்கறிஞர் ராமர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுதா, மாவட்ட தலைவர் ஜோதி மணி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.