districts

img

ராணுவ தளவாடங்கள் குறித்து கண்காட்சி

கோவை, ஆக. 22- அரசு கலைக்கல்லூரியில் ராணுவ தளவாடங்கள் குறித் தான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கோவை, அரசு கலைக்கல்லூரியில், பாதுகாப்பு ஆய்வு கள் துறையின் சார்பில் இரண்டு நாள் ராணுவ தளவா டங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் மிசைல்கள், போருக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர் கள், ராக்கெட்டுகள், ராணுவ செயற்கைக்கோள், போர்க்கப் பல்கள், பெயிலி பாலத்தின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட் டுள்ளன.  ராணுவம் மற்றும் மீட்பு பணித்துறை குறித்து பொது மக்களும், பள்ளி மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகை யிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த கண்காட்சி யானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வியாழன் மற்றும் வெள்ளி (இன்று) ஆகிய இரு நாட்கள் நடைபெறு கிறது. பொதுமக்கள் இந்த கண்காட்சியை கண்டு களிக்க ஏதுவாக அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.