districts

img

சேலம் அரசு மருத்துவமனையில் மின் ஒயர்கள் உரசி வெடித்ததால் பரபரப்பு

சேலம், ஏப்.18- சேலம் அரசு மருத்துவமனையில் மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி வெடித்த தால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனைக்கு சேலம் மட்டுமின்றி நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் நாள் தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்ற னர். இம்மருத்துவமனையில் 1,642 படுக் கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படுக்கைகளுக்கான உறைகள், தலை யணை உறைகள் ஆகியவை தினமும் மருத்துவமனை சலவையகத்தில் தூய்மை செய்யப்படும். இதற்கிடையே, சலவைய கம் மற்றும் பிரேத பரிசோதனை பிரிவுக்கு முன்புள்ள தரைத்தளத்தில் மின் ஒயர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒயர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றி அமைக் கப்பட்டிருந்த நிலையில், அவை பாது காப்பாக மூடப்படாமல் மின்சார ஒயர்கள் அனைத்தும் வெளியிலேயே தெரியும்படி இருந்து வந்தது. இச்சூழலில் கடந்த சில நாட்களாக மாநகரத்தில் கோடை மழை பெய்து வந்த நிலையில், சலவையகம் முன்பு அமைக் கப்பட்டிருந்த மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி திடீரென பயங்கர சத்தத் துடன் வெடித்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மேற்கொண்டு பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து மின் இணைப்புகளை சரி செய்த னர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.