districts

img

உதகை: சாலையோர கடைகள் அகற்றம் வியாபாரிகள் குடும்பத்துடன் போராட்டம்

உதகை, ஜூலை 11- உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலையில் இருந்த கடைகளை நக ராட்சி நிர்வாகம் அகற்றிய நிலையில், வியாபாரிகள் கொட்டும் மழையில் குடும் பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை யில் 100க்கும் மேற்பட்ட சாலையோர நடைபாதை கடைகள் இருந்தன. இந்த நிலையில் நடைபாதையில் கடைகள் இருப்பதால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகம் சார்பில் அவர்களது கடைகளை காலி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த வாரம் பொக்லைன் எந்திரம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகத்தினர் பெரும்பா லான கடைகளை அகற்றினர். இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இதுகு றித்து வனத்துறை அமைச்சர் மற்றும் ஆட்சியரிடமும் முறையிட்டனர். இதை யடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற் கொள்வது குறித்து சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இந்நிலையில், திங்களன்று மீத முள்ள  கடைகளை நகராட்சி அலுவலர் கள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட னர். இதை கண்டித்து சிறு வியாபாரி கள் திங்களன்று அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் கொட்டும் மழையிலும் குழந்தைகள் உள்பட தங்க ளது குடும்பத்தினருடன் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து வியாபாரி கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத் தினர். மேலும் அடுத்த கட்ட போராட்டம்  குறித்து வியாபாரிகள் ஆலோசனை ஈடு பட்டு உள்ளனர்.