சேலம், ஏப்.13- காலியாக உள்ள பணியிடங் களுக்கு தகுதி உள்ள நபர்கள் இருந்தும், வீண் கால தாமதங் களை தவிர்த்து உடனடியாக பதவி உயர்வை வழங்ககோரி பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. சேலம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது. இதில், பொது சுகாதார அலுவ லகங்களில், காலியாக உள்ள பணி யிடங்களுக்கு, தகுதியுள்ள நபர்கள் இருந்தும் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படாத நிலை இருப்பதை கண்டித்தும், 2014 ஆம் ஆண்டுக் குப் பின் சுமார் 9 ஆண்டுகள் நிரப் பப்படாமல் உள்ள சுகாதார ஆய்வா ளர்கள் காலிப்பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்ப வலியுறுத்தியும், தகுதியுள்ள அனைவருக்கும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பதவி உயர்வை வழங்கிட கோரியும் இந்த போராட்டம் நடை பெற்றது.
சேலம் மாவட்ட தலைவர் சி. பிரபாகரன் தலைமை ஏற்றார். நாமக்கல் மாவட்ட செயலாளர் வி. இளவேந்தன் வரவேற்புரை ஆற்றி னார். மாநிலச் செயலாளர் எம். கந்த சாமி துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் ஜே.லட்சுமி நாரா யணன், முன்னாள் மாநிலப் பொரு ளாளர் எம்.கே.ராமச்சந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் எ.சண்முகம் மற்றும் சகோ தர சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். மாநில துணைத்தலைவர் வி.செல்வம் நிறைவுரையாற்றி னார். இந்த போராட்டத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த சுகாதார துறை அலுவலர் சங்கத்தினர் பங் கேற்றனர். கோவை கோவை மாவட்ட பொது சுகா தாரத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், பந்தய சாலையில் உள்ள பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தர்ணாவிற்கு மாவட்ட தலைவர் ஆ.சு.சண்முகசுந்தரம் தலைமை ஏற்றார். போராட்டத்தை சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கே.எஸ்.ஏ.தினேஷ் துவக்கி வைத்து உரையாற்றினார். கோரிக் கைகள் குறித்து அமைப்பின் மாநில செயலாளர் பா.ராஜு உரையாற்றி னார். போராட்டத்தை வாழ்த்தி அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் எஸ். மதன் உள்ளிட்டோர் உரையாற் றினர். இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட மையங் களை சேர்ந்த திரளானோர் பங்கேற் றனர்.