ஈரோடு, மார்ச் 25- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்று றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலசங்கத்தின் ஈரோடு மாவட்ட மாநாடு வெள்ளியன்று பவானிசாகரில் துவங்கியது. இம்மாநாட்டின் முதல் நிகழ்வாக பவானிசாகர் பேருந்து நிலையத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்ட பேரணி துவங்கியது. பேரணியின் முடி வில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலா ளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.மாரி முத்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர்கள் சின்னசாமி, சகாதேவன், ஏ.பி.ராஜு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாடு சனியன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற இருக்கின்றது.