தருமபுரி, டிச.22- தருமபுரி மறைமாவட்ட சமூக சேவை சங்கம் மற்றும் சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரி சமூக சேவை சங்கத்தின் வளாகத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தருமபுரி மறைமாவட்ட ஆயர் முனை வர் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்தார். இயக்குநர் ஆர். ஜேசுதாஸ் வரவேற்றார். சமூக நல்லினக்கமேடை நிர்வாகி கள் ஏ.குமார், இரா.சிசுபாலன், வே.விசுவநாதன், பொ.மு. நந்தன், ஆர்.ஜோசுபாசு, ராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் எஸ்.கிரைஸாமேரி, ஏ.ஜெயா, கே. பூபதி, நிர்மலாராணி ஆகியோர் பங்கேற்று பேசினர். இவ் விழாவில் பெண்கள் சுய உதவி குழுக்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.