districts

img

வேலை வாய்ப்பு போதுமானதாக உருவாக்கப்படவில்லை

கோவை, ஆக.20- தேசிய தரவரிசையில் பல்வேறு கல் லூரிகள் இருப்பினும் இங்குள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை  வாய்ப்பு போதுமானதாக உருவாக்கப் படவில்லை, என அமைச்சர் பழனிவேல்  தியாகராஜன் வேதனை தெரிவித்தார். கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் நிறுவ னம்(ICT) இன் 57 ஆவது பதிப்பு மாநாடு  நடைபெற்றது. மெகா தொழில் நிறுவன  தொடர்பு நிகழ்வாக நடைபெற்ற இந்த  முதல் மாநாடு தமிழ்நாடு தி குளோபல்  ஸ்கில் கேப்பிட்டல் என்ற கருப்பொரு ளில் நடைபெற்றது. இந்த மாநாடு தமிழ் நாட்டை உலகளாவிய மையமாக மாற் றுவதற்கான பாடத்திட்டத்தை பட்டியலி டும் நோக்கத்துடன் கொள்கை வகுப்பா ளர்கள் தொழில்துறை தலைவர்கள் மற் றும் கல்வியாளர்களின் ஒருங்கிணைப் பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார்.  முன்னதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், இந்த  மாநாடு சிறப்புமிக்க மாநாடு, இந்த  மாநாட்டின் கருப்பொருள் முதலமைச்ச ரின் அறிக்கையை எதிரொலிக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள்  ஏற்கனவே அனைத்து துறைகளிலும்  குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளனர். தேசிய தரவரிசையில் பல் வேறு கல்லூரிகள் இருப்பினும் இங் குள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பு போதுமானதாக உரு வாக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலும் உலக சந்தைகளிலும் முழு திறனையும் நம்மால் அடைய முடியவில்லை என் றார். இம்மாநாட்டில், பல்வேறு கல்வி நிறுவனங்களை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் தொழில்துறை தலைவர் கள் கலந்து கொண்டனர்.