தருமபுரி, செப்.11- தருமபுரி – சேலம் நேதாஜி நெடுஞ் சாலை அருகே கழிவுநீர் கால்வாய் சீர மைக்கப்படாததால், தேங்கி நிற்கும் கழி வுநீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபா யம் ஏற்பட்டுள்ளது. தருமபுரியின் முக்கிய சாலையாக நேதாஜி நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் அரசு போக்குவரத்து மண் டல அலுவலகம், தனியார் மருத்துவ மனைகள், தனியார் வங்கிகள், தனி யார் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வரு கின்றன. இவைகளில் இருந்து வெளி யேறும் கழிவுநீர் சேலம் - தருமபுரி நேதாஜி நெடுஞ்சாலையையொட்டி உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக சென்று, பச்சையம்மன் கோவில் சுடு காடு அருகே உள்ள கால்வாயில் கலக் கிறது. நகராட்சிக்குட்பட்ட பாரதிபு ரத்தில் இருந்து வரும் இந்த கழிவுநீர் கால்வாய், அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் அருகே பல ஆண்டு களாக அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங் களில் கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறாக சாலையில் ஓடுகிறது. அதே போல் தனியார் மருத்துவமனை உள்ள இடங்களில் ஆங்காங்கே கழிவுநீர் கால் வாயில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிக ரித்து டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் நோய்கள் பரவி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நேதாஜி நெடுஞ்சாலை ஓரத் தில் கால்வாய் சேதமடைந்து காணப் படுகிறது. எனவே, கழிவுநீர் கால்வாயை முறையாக தூர்வாரி, புதுப்பிக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.