தருமபுரி, மார்ச் 26- மெட்டுக்கள் கோம்பை கிராமத்திற்க்கு செல்லும் சாலை கரடுமுரடாக இருப் பதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்குள்ளவதால் அதனை, தார்ச்சாலையாக அமைக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றி யத்தில் ஏர்ரபையனஹள்ளி ஊராட்சியில் மெட்டுக்கல் கோம்பை கிராமம் அமைந் துள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலையாக இருந்த ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு ஜல்லி மட்டும் போடப் பட்டது. தார்ச்சாலை அமைத்து தருகிறோம் என்று தெரிவித்தனர். அப்போதைக்கு மட்டும் ஜல்லிகளை சாலையில் கொட்டி பரப்பி உள் ளனர். இதன் பிறகு அதிகாரிகளோ ஒப்பந்த தாரர்களும் யாரும் கடந்த மூன்று ஆண்டு களாக திரும்பி கூட பார்க்கவில்லை. கொட்டப்பட்ட ஜல்லிகளோடு கரடு, முரடாக இருப்பதை உள்ளதால், மக்கள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், இப்பகுதி மூன்று ஊராட்சிகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால், எந்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் அதிகாரி களும் ஒருநாளும் இப்பகுதி கிராமத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கரடு முர டான சாலையில் வாகனங்கள் இயக்க முடி யாமல் சிரமமாக இருக்கிறது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் இரவு நேரங்களில் ஏதும் விச பூச்சிகள் கடித் தாலும் மருத்துவமனைக்கோ அல்லது ஆம்பு லன்ஸ் செல்வதற்கோ கூட எளிதில் செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளது. ஜல்லிகள் மட்டுமே சாலையில் பரப்பி இருந்ததால் வாகனங்கள் இயக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. அண்மையில், மழை பெய்ததின் காரணமாக சாலையில் இருந்த ஜல்லிகள் பெயர்ந்து மழை நீர் கால்வாயில் புதைந்தன. இதனால், அப் பகுதி இளைஞர்கள் அவ்வப்போது தங்கள் கிராமத்திற்கு சாலை அமைக்க நிரந்தர தீர்வு தான் ஏற்படுத்த முடியவில்லை என சாலை யில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிகளினால் விபத்து ஏற்படாமல் இருக்க சாலையில் கிடக்கும் ஜல்லிகளை சாலையின் ஓரமாக கொட்டி முறைப்படுத்தி வருகின்றனர். எனவே, இச்சாலையை தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.