districts

img

வலுவிழந்து காணப்படும் மரங்களை அகற்ற வலியுறுத்தல்

உதகை, ஜூலை 28– நீலகிரியில் பலத்த காற்றுக்கு இதுவரை 240 மரங்கள் விழுந்துள் ளன. எனவே, சாலையோரம் வலு விழந்து காணப்படும் மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள் ளது. இந்நிலையில், சனியன்று நள்ளி ரவு வீசிய பலத்த காற்றுக்கு மஞ்சூர் – உதகை சாலையில் பெங்கால் மட்டம், கீழ் கைக்காட்டி, தேவர் சோலை, காந்தி பேட்டை, ரைட்டர் கடை, லவ்டேல், காந்திநகர் உள் ளிட்ட 6 இடங்களில் அடுத்தடுத்து பெரிய அளவிலான மரங்கள் சாலை யின் குறுக்கே விழுந்தன. இதுகு றித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற நெடுஞ் சாலை, தீயணைப்பு துறையினர் மரங் களை அகற்றினர். பெரிய அளவி லான மரங்கள் என்பதால் ஊழியர்க ளுடன், பொதுமக்களும் இணைந்து பொக்லைன் உதவியுடன் மரங் களை அகற்றினர். பருவமழைக்கு இதுவரை மாவட்ட முழுவதும் 240க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந் துள்ளது. காலை நேரத்தில் மஞ்சூர் வழித்தடத்தில் பெரும்பாலான பேருந்துகள் மீது மரங்கள் விழுந்து விபத்து மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், உதகைக்கு செல்லாமல் நடுவழியில் மீண்டும் கிராமங்களுக்கு பேருந்துகள் செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், மாவட்டம் முழு வதும் சாலையோரங்களில் ஏராள மான பழமையான மரங்கள் அபாயக ரமான நிலையில் வலுவிழந்து காணப்படுகின்றன. பருவமழை சமயத்தில் இந்த மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன. எனவே, இந்த மரங்களை மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு கூறுகையில், மாவட்டத்தில் பலத்த காற்றுக்கு விழும் மரங்களை தீய ணைப்பு துறை, நெடுஞ்சாலை துறை  மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து அகற்றி வருகின்றனர். மழை பாதிப்புகளை கண்காணிக் கவும், உடனுக்குடன் சீரமைக்க 42  மண்டல குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளது, என்றார்.