districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நீர்நிலைகளை தூர்வார வலியுறுத்தல்

நீர்நிலைகளை தூர்வார வலியுறுத்தல் தருமபுரி, டிச.14- பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீர்நிலைகளை தூர்வார வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டாட் சியர் இரா.காயத்ரி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசுகையில், பருவமழை தீவிமடைந்துள்ளதால், தருமபுரி மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்திக்குட்டை கிரா மப் பகுதி விவசாயிகள் வேளாண் இடுபொருட்களை வாங்கிச் செல்லவும், சாகுபடி பொருள்களை விற்பனைக்கு கொண்டு  செல்லவும் உதவும் வகையில் பகல் நேரங்களில் தரும புரிக்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்க வேண் டும். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் விற்பனை நிலை யங்களில் ஆவின் தயாரிப்புகள் அல்லாத பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. காரிமங்கலம் பகுதி விவசாயிகள் தருமபுரி சென்று ஊர் திரும்ப இரவு 7.30 மணியுடன் நகரப் பேருந்துகளின் சேவை முடிந்து விடுகிறது. இதை இரவு 9 மணி வரை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி நான்கு முனைச்சாலை அருகில் உள்ள ஆவின் ஜங்ஷன் வளாகத் துக்கு வருகை தரும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், என வலியுறுத்தினர். இதில் அரசுத்துறை களை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விடுமுறை உத்தரவை மீறிய  தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

சேலம், டிச.14- சேலம் மாவட்டத்தில் விடுமுறை உத்த ரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளிக ளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தொடர் மழை கார ணமாக வியாழனன்று பள்ளிகளுக்கு விடு முறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி உத்தரவிட்டார். ஆனால், மாவட்ட நிர் வாகத்தின் உத்தரவை மீறி, தனியார் பள்ளி கள் சில செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந் தது. மழை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக ளுக்கு வரவழைக்கப்பட்டதால், பல்வேறு  இன்னல்களுக்கு ஆளாகினர். மேலும், பள்ளி  முடிந்து வீடுகளுக்கு திரும்புவதிலும் சிக்கல் கள் ஏற்பட்டன. இந்நிலையில், பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பள் ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் நேரில்  சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, விடு முறை அறிவிப்பை மீறி செயல்பட்ட தனி யார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதி காரிகள் கூறுகையில், தொலைதூர மாண வர்கள் விடுமுறை அறிவிப்புக்கு முன்னதா கவே பள்ளிகளுக்கு வந்துவிட்டதாகவும், விடுமுறை அறிவிப்புக்கு பின்னர் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தாகவும் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட் டன. அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிக ளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது. இதே செயலில் தொடர்ந்து ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக் கான அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும், என எச்சரிக்கை விடுத்துள் ளனர்.

சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

சேலம், டிச.14- சேலத்தில் விதிமுறையை மீறி இயங்கிய 10 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சாயக்கழிவுநீர் நீர் நிலைகளில் வெளியேற்றப்படுவதாக புகார் கள் எழுந்தன. இதையடுத்து, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து அனுமதியின்றி இயங்கும் சாயப் பட்டறைகள், கழிவுநீரை வெளியேற்றிய சாயப்பட்டறைகளை கண்டறிந்து மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர். அதன் படி, காடையாம்பட்டி, எடப்பாடி, மேட்டூர் பகுதிகளில் இருந்த வந்த புகாரின்பேரில், மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனை  மேற்கொண்டனர். அதில், 10 சாயப்பட்டறை களிலிருந்து நீர்நிலைகளில் கழிவுநீர் வெளி யேற்றப்படுவது கண்டறியப்பட்டது. இதைய டுத்து அந்த 10 சாயப்பட்டறைகளின் மின்  இணைப்பை துண்டிக்க மின்வாரியத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதன் பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் கூறுகையில், சேலத்தில் விதிமுறையை மீறி செயல்பட்டு வந்த 10 சாயப்பட்டறைகள் கண் டறியப்பட்டுள்ளன. இந்த சாயப் பட்டறைக ளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது, என்றனர்.

தகுதிச்சான்று இல்லை: 136 வாகனங்கள் பறிமுதல்

சேலம், டிச.14- சேலம், தருமபுரியில் தகுதிச்சான்று, உரி மம் இல்லாமல் இயக்கப்பட்ட 136 வாகனங் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களில் சாலை விபத்து களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கை களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். சேலம் சரகத்துக்குட் பட்ட சேலம், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, தருமபுரி, அரூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக் கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் உரி மம், தகுதிச்சான்று குறித்து வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் சோதனை நடத்தி வரு கின்றனர். கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனையில், விதிமுறைகளை மீறி வாக னங்களை இயக்கியவர்களிடம் இருந்து ரூ.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கியது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், உரிமம் இல்லா மல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக் காக 37 லாரி, 17 ஆட்டோ, 2 ஆம்னி பேருந்து உள்ளிட்ட 136 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.

சேலத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம்

சேலம், டிச.14- சேலத்திலிருந்து சிவகாசி, கோவில் பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிக ளுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், கடும் சிரமத்தை சந்திப்பதாக பயணிகள் குற் றஞ்சாட்டியுள்ளனர். சேலத்திலிருந்து கோவில்பட்டி, சிவ காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த 8 பேருந்துகளின் சேவை நிறுத்தப்  பட்டுவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா, 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு  மேலான பேருந்துகளை விரைவுப் போக் குவரத்து கழகத்திடம் ஒப்படைக்க அர சாணை பிறப்பித்தார். அதன் எதிரொலி யாக, சேலம் கோட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அனைத்து பேருந்துகளும் ரத்து செய் யப்பட்டு விட்டன. அவற்றுக்கு மாறாக விரைவு போக்குவரத்து கழகம் எந்தவித புதிய பேருந்துகளும் இயக்கப்பட வில்லை. அதுமட்டுமின்றி சேலம் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த  பேருந்துகளின் தடம் நீட்டிப்பு செய்து, தற்போது ஓசூர், பெங்களூருவிலிருந்து இயக்கப்படுகிறது. அப்படி இருக்கை யில் சேலத்தில் இருந்து தென் மாவட் டங்களில் செல்லும் பயணிகள் மதுரை  சென்று தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநரிடம், கேட்டால் வருவாய் இல்லை என பதிலளித்துள் ளார். அரசு பேருந்துகள் வருவாய்க்காக இயக்கப்படுவதில்லை. அவை பொது மக்களின் சேவைக்காக இயக்கப்படு கிறதென, அனைவரும் அறிந்ததே. பேருந்து நிறுத்தப்பட்டதற்கு, அதிகாரி கள் தனியார் ஆம்னி பேருந்து உரி மையாளரிடம் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவது காரணம் என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. தற்போது தமிழ் நாட்டில் பண்டிகைகள் வரிசை கட்டும்  நிலையில், சேலத்தில் இருந்து தென்  மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட பேருந் துகளை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

காக்கிநாடாவிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், டிச.14- சபரிமலை சீசனை முன் னிட்டு, காக்கிநாடாவிலி ருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வா கம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், சபரிமலை சீசனை முன்னிட்டு, டிச.18  மற்றும் 25 ஆகிய புதன்கிழ மைகளில் இரவு 11.50 மணிக்கு காக்கிநாடாவில் இருந்து புறப்படும் காக்கி நாடா - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07173) வெள்ளிக்கிழ மைகளில் கொல்லம் ரயில்  நிலையத்தை சென்றடை யும். டிச.20 மற்றும் 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் கொல்லத்திலிருந்து காலை 8.40 மணிக்குப் புறப்படும் கொல்லம் - காக்கிநாடா சிறப்பு ரயில் (எண்: 07174) மறுநாள் மாலை 4 மணிக்கு காக்கிநாடா ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயிலா னது, காயன்குளம், மாவே லிக்கரை, செங்கன்னூர், திரு வல்லா, கோட்டயம், எர்ணா குளம் டவுன், ஆலுவா, திருச் சூர், பாலக்காடு, போத்த னூர், திருப்பூர், ஈரோடு,  சேலம், திருப்பதி, கூடூர்,  நெல்லூர், ஓங்கோல், விஜய வாடா வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நடத்தும் பயிற்சி வகுப்பில் படித்த ஆறு மாணவர்கள் வெற்றி

அரசு நடத்தும் பயிற்சி வகுப்பில் படித்த ஆறு மாணவர்கள் வெற்றி உடுமலை, நவ.14- உடுமலையில் நடைபெற்று வரும் இலவச வகுப்பில் படித்த ஆறு மாணவர்கள், போட்டி தேர்வில் வெற்றி பெற்று  உள்ளார்கள். தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுக ளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு, உடுமலை சர்தார் வீதியில்  உள்ள பார்க் நகராட்சி நடுநிலைப்பள்ளி  வளாகத்தில் இலவச  பயிற்சி வகுப்புகள்  நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக  குருப் 2 மற்றும்  2எ முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் படித்த காமராஜ்,  கல்பனா, அன்சார் அலி, மணிகண்டன், மாலதி மற்றும் ராஜேந் திரன் ஆகிய ஆறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளார் கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், ஏழை  குழந்தைகளின் கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழக அரசு நடத்திய இலவச வகுப்புகளில் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்த்து  உள்ளனர். இப்போட்டி தேர்வுகளுக்கு படிக்க பல லட்சம் செல வுகள் செய்து தனியார் நிறுவனத்தில் படிக்க முடியாத மாண வர்களுக்கு, பயன்படும் வகையில் வகுப்புகளை ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும், முறையாக வகுப்புகளை எடுப்பது டன், வாரம் ஒருநாள் தேர்வுகள் நடத்தி முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி உற்சாகப்படுத்திய வகுப்பு ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

எம்எல்ஏ நிதி ரூ.27 லட்சத்தில்  அங்கன்வாடி மையம் திறப்பு

எம்எல்ஏ நிதி ரூ.27 லட்சத்தில்  அங்கன்வாடி மையம் திறப்பு திருப்பூர், டிச.14 - திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தென்னம்பாளை யம் மற்றும் முத்தையன் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர்  தொகுதி வளர்ச்சி நிதி ரூபாய் 27 லட்சத்தில் அங்கன்வாடி மையங்களை தெற்கு தொகுதி எம்எல்ஏ கே.செல்வராஜ் திறந்து வைத்தார். திருப்பூர் 52 ஆவது வார்டு, தென்னம்பாளையம் மற்றும்  முத்தையன் நகர் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக  கட்டப்பட்டுள்ள இரண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி (அங்கன்வாடி) மையங்களை கே.செல்வராஜ் எம். எல்.ஏ திறந்து வைத்தார். பின்னர் வெள்ளியங்காடு கே.எம்.ஜி  நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  திட்ட நிதியில் ரூ.25.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட வுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி (அங்கன்வாடி)  மையம் மற்றும் புதிய நியாய விலைக் கடை கட்டுமானப் பணி களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், மேயர் ந.தினேஷ் குமார், துணை மேயர் எம்.கே.எம் ஆர்.பால சுப்பிரமணியம் அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

புற்று நோய் சிகிச்சை மையம் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

திருப்பூர், டிச.14- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட் டப்பட்டு வரும் புற்று நோய் சிகிச்சை மையம் தொடர்பான  பணி முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரோட்டரி சங் கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடி  மதிப்பீட்டில் அதி நவீன புற்று நோய் சிகிச்சை மருத்துவ மனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண் மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர்   தலைமையில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் கட்டப்பட்டு வரும் புற்று நோய் சிகிச்சை மையம்  தொடர்பான பணி முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் உதகை, டிச.14- கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நீல கிரி மாவட்டத்தில் 16 ஆம் தேதி தொடங்குகிறது. மாடுகளில் ஏற்படும் நோய்களில் மிககொடிய நோய், கோமரி நோயாகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சமீபத் திய கணக்கெடுப்பின்படி 28200 பசு மற்றும் எருமை யினங்கள் உள்ளன. எனவே கோமாரி நோயில் இருந்து  கால்நடைகளை காக்கும் வகையில் கால்நடை பராமரிப்பத் துறை சார்பில் என்ஏடிசிபி 6ஆவது சுற்று கோமாரி நோய் தடுப் பூசி கால்நடைகளுக்கு போடும் பணி  16.12.2024 முதல் 20.1.2025 வரை நடைபெற உள்ளது. இதற்காக நீலகிரி மாவட்ட  கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 29 தடுப்பூசி குழுக் கள் அமைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாளில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விவ ரத்தினை முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கால்நடை மருந்த கத்தால் அந்த கிராமத்திற்கு தெரிவிக்கப்படும். கோமாரி நோய் தடுப்பூசி போடும் நாளில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்குத் தவறாது தடுப்பூசி போட்டு கால்நடை களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என கால்நடை துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் 613 வழக்குகளுக்கு தீர்வு

உதகை, டிச.14- நீலகிரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 613 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்குவதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும், சட் டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற் றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2015 முதல், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தேசிய லோக்  அதாலத் நடத்தப்படுகிறது. அதன்படி நீலகிரி மாவட்டம், உதகை யில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நீலகிரி மாவட்டத்தில் சட்டப் பணிகள்  ஆணைக் குழு தலைவரும் மாவட்ட நீதிபதி யுமான முரளிதரன் தலைமையில் சனியன்று  நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய் யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், வங்கி வழக்குகள், வாராக்  கடன் வழக்குகள், குடும்ப பிரச்சினை சம் பந்தமான வழக்குகள் என 6149 வழக்குகள்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.  இதில், ரூ.3 கோடியே 27 லட்சத்து 82 ஆயி ரத்து 278 மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு  காணப்பட்டது. மொத்தம் 613 வழக்குக ளுக்கு தீர்வு காணப்பட்டது.

ஆவின் நிறுவன சுமைப்பணியாளர்களுக்கு கூலி உயர்வு சிஐடியு தலையீட்டால் உடன்பாடு எட்டப்பட்டது

ஈரோடு, டிச. 14- சிஐடியு தலையீட்டால், ஆவின் நிறுவன  சுமைப்பணியாளர்களுக்கு கூலி உயர்வு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை சாலை யில் ஆவின் நிறுவனத்திற்குச் சொந்தமான கால்நடை கலப்புத் தீவன தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சுமார் 60 பேர் உள்ள னர். லாரி ஒப்பந்தம் இரண்டு ஆண்டுக ளுக்கு ஒருமுறை என்பதால் சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் இரண்டு ஆண்டுக ளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் என்ற நிலை ஏற்பட்டது. கடந்த ஒப்பந்தம் காலாவதியான நிலை யில் 20.8.2024 அன்று தொழிற்சாலையின் துணை பொது மேலாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், தீவ னம் ஏற்றுவதற்கும், மூலப்பொருட்கள் இறக் குவதற்கும் டன் 1க்கு ரூ.120-ம், 25 கிலோ மூட்டை இறக்குவதற்கு மூட்டை 1க்கு ரூ.5ம்,  புதிய சாக்குக் கட்டு இறக்க பேல் 1க்கு  ரூ.15 என ஒப்பந்தமானது. புதிய ஒப்பந்தப்படி  கூலியை 21.9.2024 முதல் கொடுக்க வேண்டும். 6 ஒப்பந்ததாரர்கள் இருக்கும் நிலையில் 4 பேர் ஒப்பந்தப்படி கூலியைக் கொடுத்து வந்தனர். ஆனால், இருவர் ஒப்பந் தப்படி கூலியை உயர்த்திக் கொடுக்க வில்லை. இதனால், மற்ற 4 பேரும் உயர்த்தப் பட்ட கூலியைக் குறைக்கும் நிலை ஏற்பட்ட தால், சுமைப்பணி தொழிலாளர்கள் வேறு வழியின்றி வேலை நிறுத்தம் அறிவித்தனர். அது தொடர்பாக தொழிலாளர் துறை தலை யிட்டது. ஆனால் சமரசம் ஏதும் ஏற்பட வில்லை.  இதற்கிடையில் ஒப்புக் கொண்டபடி கூலி  உயர்வு கிடைக்கவும், ஆவின் நிறுவனத்தில் அமைதியாகவும், சுமூகமாகவும் வேலை நிலையைக் கொண்டு செல்லவும் உறுதி  செய்யுமாறு சிஐடியு சங்கத்தின் தலைவர் டி. தங்கவேலு தலைமையில் அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதனைத்  தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  ஆவின் கால்நடை கலப்பு தீவன நிறுவனத் தின் துணை பொது மேலாளர், சுமைப்பணி  தொழிலாளர் சங்க தலைவர் டி.தங்கவேலு,  செயலாளர் அர்த்தநாரி, சிஐடியு மாவட்டத்  தலைவர் சுப்ரமணியன், கிளை நிர்வாகிகள்  ரவி, வீரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர்  கலந்து கொண்டனர். இதில், ஒப்பந்தப்படி  25 விழுக்காடு கூலி உயர்வு வழங்குவது என  உடன்பாடு ஏற்பட்டது.