districts

img

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பேசித் தீர்வு காண்க மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

சேலம், ஜூலை 14- மின் ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த கோரிக்கைகளை உடனடி யாக பேசித் தீர்வு காண  வேண்டும் என சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மேட்டூர் அனல் மின் கிளை ஆண்டு பேரவையில் தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மேட்டூர் அனல் மின் கிளை ஆண்டு பேரவை  எஸ்.செல்வகணபதி தலைமையில் நடை பெற்றது. ஜி.நாகம்மாள் செங்கொடியை ஏற்றி வைத்தார். கே.சண்முகம் வரவேற்புரை யாற்றினார். ஈரோடு மண்டல செயலாளர் சி. ஜோதிமணி பேரவையை துவக்கி வைத்து  உரையாற்றினார். வேலை அறிக்கையை வி. இளங்கோ, வரவு, செலவு அறிக்கையை  எஸ்.செந்தில்வேலன் ஆகியோர் முன்வைத் தனர். மாநில துணைத்தலைவர் பி.கே.சிவக் குமார் சிறப்புரையாற்றினார்.   இதில், மின்வாரிய ஊழியர்களின் ஊதிய  உயர்வை உடனே பேசித்தீர்க்க வேண்டும்.  அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியு டன் நேரடியாக ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழி லாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும். தரமான தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்து அனல் மின் நிலையங்களை முழுமையாக இயக்க தமி ழக அரசு மின்வாரியம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து தலைவராக கே. சண்முகம், செயலாளராக எஸ்.செந்தில்  வேலன், பொருளாளராக எஸ்.செல்வகண பதி உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு தேர்ந் தெடுக்கப்பட்டது. நிறைவாக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை  செயலாளர் எஸ்.அப்பாதுரை உரையாற்றி னார்.