districts

img

தமிழ்நாடு மின்சார வாரியத்தை 3 ஆக பிரிக்க அரசு உத்தரவு

சேலம், பிப்.3- தமிழ்நாடு மின்சார வாரியத்தை 3 ஆக பிரிக்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளதைக் கண்டித்து மின்வா ரிய தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியம் தமி ழக மக்களின் மின் தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய அமைப் பாக செயல்பட்டு வருகிறது. இந்நி லையில், இதனை மரபுசாரா எரிசக்தி பசுமை மின்சார கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், தமிழ்நாடு மின்  விநியோக கழகம் என மூன்றாக பிரிக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கம்பெனிகள் சட்டம் அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன் றாக பிரிக்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதன் மூலம் மின்வா ரிய தனியாருக்கு துணை போகும் நிலை அரசுக்கு ஏற்படும். இதனால்  பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப் படைவார்கள். ஒன்றிய அரசின் மின் சார சட்ட திருத்த மசோதாவை தமி ழக அரசு ஆதரிப்பது போல் இந்த நிலைபாடு உள்ளது. இனிவரும் காலங்களில் மின்விநியோகம் தனி யார் பெரு முதலாளிகளிடம் ஒப்ப டைக்கும் செயலாக தமிழக அரசின் முடிவு உள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங் கத்தின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட் டம், மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு சிஐடியு தலைவர் சுந்தரராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் உடையாப் பட்டி பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவல கம் முன்பு சிஐடியு சேலம் மின்திட்டக் கிளைத் தலைவர் கருப்பண்ணன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வி. இளங்கோ உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கோவை இதேபோன்று, கோவை சிவா னந்தா காலனியில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கூட்டுக்குழு வின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சம்மேளனத்தின் தலைவர் கந்தவேல், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண் டலச் செயலாளர் து.கோபாலகிருஷ் ணன் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகி கள் மதுசூதனன், ரங்கநாதன், தமிழ் வாணன், குழந்தை வேல், நாகராஜ், பாஸ்டியன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.