உடுமலை, பிப். 3- தமிழ்நாடு மின்வாரியத்தை,மூன்றாக பிரிப்பதை கண்டித்து உடுமலை மின்வா ரிய தலைமை அலுவலகத்தின் முன்பாக மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில் சனியன்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் உற் பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் ஏற்க னவே வாரியத்தில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாமல் இருப்பதால் தொழிலா ளர்கள் பணி சுமையில் உள்ளதை சரி செய்யா மல் தமிழ்நாடு அரசு புதிய அரசு ஆணை 6 மற்றும் 7 யின் படி மின் வாரியத்தை மூன்று வகையில் பிரிக்க அரசாணையின் படி தமிழ் நாடு கிரீன் எனர்ஜி காப்ரோசன் லிமிட், தமிழ் நாடு மின் உற்பத்தி கார்ப்ரேசன் லிமிட் மற்றும் தமிழ்நாடு மின விநியோகம் காப்ரேசன் லிமிட் என்று மூன்றாக பிரிப்பதை உடனடியாக கை விட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மின்வாரிய சம்மேளத்தின் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். சிஐடியு மத்தியமைப்பின் தலைவர் ஜெகானந்தா, ஐக்கிய சங்கத்தின் ஸ்ரீதர் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டார்கள்.