districts

img

ஊதிய உயர்வு நிலுவையை கேட்டு மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 30 - ஊதிய உயர்வு நிலுவைத் தொகை களை உடனடியாக வழங்க வலியுறுத்தி புதனன்று (ஆக.30) மாநிலம் முழுவதும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வாரியத்தில் உள்ள சுமார் 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் அறிவிக்க உள்ளதை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதி யாக சென்னை தெற்கு மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு தென்சென்னை திட்ட கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை - 1ன் தலைவர் ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், சென்னை மண்டலச் செய லாளர் ஏ.முருகானந்தம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஹெலன் தேவ கிருபை கிளை நிர்வாகிகள் பண்டாரம் பிள்ளை, குமார் (கிளை 1), தண்டபாணி, கௌதமன் (கிளை 2) உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு சார்பில் மணலி 400 துணை மின் நிலையம் அருகே முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் கே.வெங்கடைய்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு செயலாளர் இ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.