உடுமலை, ஏப்.4- உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாசன சங்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். பரம்பிக்குளம் ஆழியாறு பாசனதிட்டம் (பிஏபி), கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்வு செய்தபின், பகிர்மானக்குழு தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். பகிர்மானக்குழு தலைவர்களில் ஒருவர் திட்டக் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவர். இந்த பாசனசபை யினர், நீர் நிர்வாகம், கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட பணி களில் ஈடுபடுவர். இப்பதவிகளுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. 5 ஆண்டாக இருந்த பதவிக் காலம், கூடுதலாக 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருந்தது. இதன் பின் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடி வுற்றது. அதன்பிறகு, கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் நடத் தபடவில்லை. தற்போது பாசன சங்க நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஏபி பாசனத் திட்டத்தில், உடுமலை தாலுகாவில் 36 சங்கம், 234 ஆட்சி மண்டல தொகுதிக்கு வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்திலும், மடத்துக்குளம் தாலுகா அலு வலகத்தில் 3 சங்கம், 14 ஆட்சி மண்டல தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது. இதேபோல், அமரா வதி பாசனத் திட்டத்திற்கு 22 சங்கங்கங்கள், 88 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கு மனுத்தாக்கல் மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் துவங்கியது. பாசன சங்கத் தலை வர், ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் தேர்தலுக்கு வேட்புமனு திங்களன்று பெறப்படுகிறது. வேட்புமனு பரிசீலனை வரும் 8 ஆம் தேதியும், போட்டி யிருந்தால் வரும் 17 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேர்தலும் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை அன்று மாலை வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவர். பாசன சங்க நிர்வாகி கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வருவாய் கோட் டாட்சியரும், துணை ஆட்சியரும் உள்ளனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வட்டாட்சியர் நிலையிலான அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.