districts

img

100 நாள் வேலை திட்டத்தை விரிவு படுத்திடுக

கோபி, ஜூலை 31- நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் விரிவு படுத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, தமி ழகம் முழுவதும் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு குறைந்தபட்ச நிதி யாக ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்க  வேண்டும். வருடத்திற்கு 200 நாட் கள் வேலையும் ஊதியமாக ரூ.600  ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 60  வயதை கடந்தவர்களுக்கு மாதம்  ரூ.5000 ஓய்வு ஊதியம் உயர்த்தி  வழங்க வேண்டும். சமூக பாது காப்பு நிதி திட்டங்களுக்கான நிதியை இரட்டிப்பாக வழங்க வேண்டும். பொது விநியோக திட் டத்தை விரிவுபடுத்தி அனைத்து அட்டைதார்களுக்கும் உணவு தானியம், மண்ணெண்ணெய் வழங்க வேண்டும், விவசாய தொழி லாளர்களுக்கு தனிநல வாரியம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி, நக ராட்சி பகுதிகளில் விரிவு படுத்த  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்கம் சார் பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது. இதன்ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேருந்து நிலை யம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, தாலுகாத் தலைவர் விஆர்  மணிக்கம் தலைமை வகித்தார்.  இதில், மாவட்டச் செயலாளர் சண் முகவல்லி, தாலுகாச் செயலாளர் கே.சி.ரங்கசாமி, தாலுகா செயலா ளர் ஜ.ஏ.துரைசாமி, மாரிமுத்து, செந்தில்குமார், அய்யாசாமி, வேலுச்சாமி, கிருஷ்ணவேணி, மாறன், வேலுச்சாமி, தனசிங், சேகர், நாகராஜன், சண்முகம், ஜ. அய்யாசாமி, மாதர்சங்கம் மல் லிகா, முத்தாயம்மாள், ஏ.ரங்கசாமி,  பெருமாள், எம்.கே.நடராஜன், வெள்ளியங்கிரி, கருப்புசாமி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  கோவை இதைபோல், கோவை மாவட் டம், ஆனைமலை முக்கோணம் பகு தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியத் தலைவர் ப.பழனி சாமி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஏ.துரைசாமி, மாவட் டப் பொருளாளர் கே.மகாலிங்கம், ஒன்றியப் பொருளாளர் எ.முத்து சாமி மற்றும் நிர்வாகிகள் கே.பழ னிச்சாமி, ஆர்.ராமலிங்கம், கே. செல்வம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதி காரியிடம் மனு அளித்தனர்