கோவை, ஏப்.28- அரசு, அரசு உதவிபெறும் பள்ளி களை அருகமைப் பள்ளிகளாக அறி வித்து அனைவருக்கும் சமமான கற் றல் வாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார். இதுதொடர்பாக, கோவையில் ஞாயிறன்று அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: அனைத்து குழந்தை களுக்கும் சமமான கற்றல் வாய்ப்பை பெறுவதற்கு வழிவகுப்பதே கல்வி உரிமை சட்டத்தின் நோக்கமாகும். பொருளாதாரத்தில் நலிந்த, பின்தங் கிய குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான கட்ட ணத்தை அரசே வழங்கி வருகிறது. இந்த சட்டம் 2010 முதல் நடைமு றையில் உள்ளது. அரசு பள்ளிகளை தவிர்த்து வேறு பள்ளிகளில் குழந்தை களை சேர்த்தால் அத்தகைய பெற் றோர் அரசிடம் கல்வி கட்டணம் கோர முடியாது என்று கல்வி உரிமை சட்டத் தின் பிரிவு 8 மிகத் தெளிவாக கூறியுள் ளது. எனவே, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தையும் 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் அருகமைப் பள் ளிகளாக அறிவித்து அனைத்து குழந் தைகளும் சமமான கற்றல் வாய்ப்பு களை பெரும் வகையில் மாணவர் களை சேர்க்க உரிய முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் சேர்க்காமல் வேறு பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் தங்களின் சொந்த விருப்பத்தில் தங்களின் சொந்த செல வில் சேர்த்து கொள்வதில் எந்தவித தடையும் இருக்கப் போவதில்லை. அதேநேரத்தில் வாய்ப்பு மறுக்கப் பட்ட மற்றும் நலிந்த பிரிவு மக்கள் தனி யார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் போது தனியார் பள்ளிகள் பாகுபாடு காட்டாமல் அனைத்து பிரிவினரையும் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு உத வித்தொகை, ஊக்கத்தொகை சமூக நலத்துறை மூலம் கிடைக்கும். 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை தொடங்கி 3.20 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த சூழலில் விரைந்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை அருகமைப் பள்ளிகளாக உரிய அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.