நாமக்கல், ஆக.9- ஆசிரியர் நியமிக்கப்படாத தால், பழங்குடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளதை சுட்டிக்காட்டி, கொல்லி மலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில் சுமார் 65க்கும் மேற்பட்ட ஆசி ரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால் பழங்குடியின மாணவ, மாணவிகளின் கல்வி நலன் எதிர் காலம் பாதிக்கப்படுகிறது. தற்பொ ழுது ஏராளமான ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சமவெளி பகுதி களுக்கு சென்று விட்டனர். அதே சம யத்தில் தற்போது நடைபெற்று வரக் கூடிய கலந்தாய்வில் கொல்லி மலையை ஆசிரியர்கள் தேர்ந்தெ டுக்க மிகப்பெரிய தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் கூடுதலாக உள்ள அரசு உதவிபெறும் தொடக் கப்பள்ளிகளில் பணியாற்றக்கூடிய 27 ஆசிரியர்களை கொல்லிமலை பகுதிக்கு டெப்டேசன் என்ற பெய ரில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இருப்பினும் 65க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலேயே இருந்து வருகிறது. தற்பொழுது நடுநிலைப்பள்ளிகளுக்கும் பணி மாறுதல் நடைபெற்று வரும் நிலை யில், அதற்கான இடங்களை நிரப் பப்படாமல் உள்ளதால் காலிப்பணி யிடங்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக மாறக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாகக்கூறி இருந்தாலும், அவர்களுக்கு போதுமான பணி அனுபவமோ, மாணவர்களை கையாளக்கூடிய திறமையும், உள வியல் ரீதியான அணுகுமுறையோ இல்லாத சூழலில் பல்வேறு விளை வுகளை நம் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பது கல்வியாளர் களின் கவலையாக உள்ளது. இந்நிலையில், கொல்லிமலை வட்டம், தேவனூர் நாடு செங்காட்டுப் பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நிரந் தர ஆசிரியர் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வியாழனன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்திற்கு கட் சியின் மூத்த தலைவர் வி.சி.பழனி தலைமை வகித்தார். மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தங்கராஜ், மாவட்ட நிர்வாகி கள் வி.கே.வெள்ளியசாமி, கே.வி. ராஜ், எஸ்.சி.சிவனேசன் உள்ளிட் டோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி இந்திய மாணவர் சங்கத் தின் முன்னாள் மாநிலத் தலைவ ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னருமான ஏ.டி.கண்ணன் உரையாற் றினார். இதில் சிபிஎம் நிர்வாகிகள் தினேஷ்குமார், இ.கே.சின்ன பையன் தேவனூர் நாடு, செங்காட்டுப்பட்டி, விளாரம், பரியூர், சேட்டூர் உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கொல்லிமலை காவல் உதவி ஆய் வாளர் தியாகராஜன் மற்றும் வட் டார வளர்ச்சி அலுவலர் பழனிச் சாமி ஆகியோர் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு நாட்களில் செங்காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள் ளிக்கு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், உறுதி அளித்தபடி, ஆசிரி யர் நியமனம் நடைபெறாத பட்சத் தில் சுதந்திர தினத்தன்று (ஆக.15) மேற்கண்ட கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரி விக்க போவதாக சிபிஎம் தலைவர் கள் தெரிவித்துள்ளனர். முடிவில், கட்சியின் கிளைச் செயலாளர் சி. ரேவதி நன்றி கூறினார்.