உதகை, செப்.17- இ-பாஸ் நடைமுறை என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அரசு மேல்முறையீடு செய்து நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் நீலகிரி மாவட்டத் தலைவர் என்.வாசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து சுற்றுலாப் பயணிகள் நீலகி ரிக்கு வருவதை கட்டுப்படுத்துவது என்ற நோக்குடன் மற்ற மாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து நீலகி ரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்ற ஒரு உத்தரவு வெளியிட்டது. இந்நிலையில், 2 ஆவது சீச னான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா மற்றும் மற்ற மாநிலத்தில் இருந்து வரும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி வந்த செல்லுகின்றனர். இவர்கள் வரும் வாகனத்திற்கு 1992 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு நுழைவு வரி வசூல் செய்கிறது. சாலைகள் பழுதடைவதை சரி செய்யவே அப் போதையை லீனா நாயர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது நுழைவு வரி திட்டத்தை அறிமுகப்படுத் தினார்கள். துவக்கத்தில் ரூ. 2, 3 கோடி மட்டும் ஏலம் வருமானம் கிடைத்த நிலையில், தற்போது பல நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது.
நீலகிரியின் சாலைகள் சரி செய்யவோ, சுற்று லாப் பயணிகளின் வசதிகள் பெருக் கவோ, இதை பயன்படுத்தாமல் அர சின் வருமானமாக இது கணக்கிடப் படுகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் நாடுகாணி பகுதியை கடந்து கேரளா எல்லை வரையுள்ள 6 கிலோ மீட்டர் சாலையானது பய ணிகள் சோர்வடையும் வகையி லான மிகப் பெரிய குண்டும் குழியு மாக உள்ளது. வாகனங்கள் இக் குழியில் இறங்கி பழுதடைந்து விட்டால் பல மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்படுகிறது. கர்நா டகா மற்றும் நீலகிரி மாவட்டத்தி லிருந்து பொருட்களை ஏற்றிச் செல் லும் கனரக சரக்கு வாகனங்கள் இந்த பள்ளங்களில் சிக்கி பழுதடை வதும், சாலையின் குறுக்கில் விழுந்து விடுவதும் தொடர் நிகழ் வாக உள்ளது. ஒரு ஒப்பந்ததாரர் வாழ்வதற்காகவே, கடந்த 25 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் இந்த சாலைப் பணிக்காக அந்த ஒப் பந்ததாரருக்கு நிர்வாகம் பட்டு வாடா செய்துள்ளது. சுற்றுலா வரும் வாகனங்களை எவ்வாறு முறையாக பார்க் செய்ய வைப்பது என்பதில் நிர்வாகத்திற்கு ஒரு அடிப்படையான விஞ்ஞான பார்வையும் இல்லை. உதகை, குதி ரைப் பந்தய மைதானம் தனியார் கிளப் வசம் உள்ளது. இங்கே பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பல வருடங்களாக மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத் தியது. இதுபோன்ற இட வசதிகள் உதகையை சுற்றிய பல இடங்களி லும் உள்ளது. அதை கண்டறிந்து பயன்படுத்தி உதகை வரும் சுற்று லாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அதை செய்யாமல் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட காரணமாக உள்ளது. மேலும, மேட் டுப்பாளையம்-குன்னூர்- உதகை பாதையில் பைபாஸ் வசதி உரு வாக்க முடியும். கூடலூர் நகரத்திற் குள் வராமல் மைசூர் சாலையில் இருந்தும், நாடுகாணி சாலையில் இருந்து உதகை சாலைக்கும் பைபாஸ் வசதி ஏற்படுத்த முடி யும். நெடுஞ்சாலை துறை இதைப் பற்றி தீவிரமாக யோசிப்பதில்லை.
அனுப்பப்படும் திட்டங்களுக்கு குறித்த காலத்தில் சென்னை தலைமையில் இருந்து அனுமதி கிடைப்பதும் இல்லை. தொழில் கிடைக்கவும் வருமா னம் பெருக்கவும் முதல்வர் வெளி நாடு சென்று முயற்சிக்கும் போது, பலநூறு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் நுழைவு வரியை ஏற்ப டுத்தி வாகனங்களை நீலகிரிக்கு வர விடாமல் செய்யும் இ-பாஸ் சம்பந்த மான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு அவசரமாக மேல் முறையீடு செய்ய மேலும் கால தாமதம் செய்யக் கூடாது. சுற்றுலாப் பயணிகளின் வரு கையால் நீலகிரியில் உற்பத்தியா கும் விவசாய பொருட்களான தேயிலை, காப்பி, மிளகு, ஏலம் ஆகி யவை அதிக அளவில் விற்பணை யாகிறது. ஊட்டி வர்க்கி, ஊட்டி மிட்டாய் ஆகியவற்றின் விற்பனை யும் பெரிய அளவில் உயர வாய்ப் புள்ளது. வியாபாரிகளின் வியாபா ரம் பெருகும். வெறிச்சோடி கிடக் கும், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள விடுதி கள் செழிப்பாக இயங்கக் கூடும். உணவுப் பொருட்கள் சரியான விலை யில் விற்பனை செய்யவும், தங்கும் விடுகளின் கட்டணம் முறைப்படுத் தவும் மாவட்ட நிர்வாகத்தின் தலை யீடு தேவைப்படுகிறது. எனவே தற் போது உள்ள பாதிப்புகளுக்கு இ-பாஸ் நடைமுறை பிரதான கார ணமாக உள்ளது. இதனை உணர்ந்து தமிழக அரசும், நீலகிரி மாவட்டத்தை சார்ந்த சுற்றுலாத் துறை அமைச்சரும் தற்போது உள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.