பவானி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவுநீர்
பவானி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவுநீர் ஈரோடு, பிப்.20- பவானி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியு றுத்தி பவானி பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்த னர். இதுகுறித்து அம்மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதி யில் ஐந்துக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் கழிவு நீரை சுத்தி கரிக்காமல் இரவு நேரங்களில் கழிவு நீரை குடியிருப்பு பகுதி வழியாக வெளியேற்றி வருகின்றனர். இந்த கழிவுநீர் பவானி ஆற்றில் கலந்து கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்தி வருகி றது. இதனால் பவானி ஆற்று தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வரு கிறது. எனவே கழிவு நீரை வெளியேற்றி வரும் சாய ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித் துள்ளனர்.
இழப்பீடு வழங்கவில்லை: மூன்று அரசு பேருந்துகள் ஜப்தி
கோபி, பிப்.20- நஷ்டஈடு வழங்கத் தவறியதாக கோபிசெட்டிபாளையத்தில், மூன்று அரசு பேருந்துகளை, நீதிமன்ற ஊழி யர்கள் ஜப்தி செய்தனர். மதுரை மாவட்டம், அண்ணாநக ரைச் சேர்ந்தவர் நாராயணசாமி(39). இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு அரசு பேருந்தில், தேனியிலி ருந்து கம்பம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத வித மாக பேருந்து கவிழ்ந்தது. இதில், இவ ருக்கு இடது கால் மற்றும் இடது இடுப் பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகு றித்து வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கக் கோரி, கோபி சார் நிலை நீதிமன்றத்தில் நாராயண சாமி 2013 ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த, அப்போ தைய நீதிபதி ஜெயந்தி 2014ஆம் ஆண்டு ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 600 நஷ்ட ஈடாக வழங்க அரசு போக்குவரத்து கழ கத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் போக் குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு நஷ்ட ஈடு கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதைதொடர்ந்தும், தொகை செலுத்தாத காரணத்தினால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய கோபி சார் நிலை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவித்யா உத்தர விட்டார். அதன்பேரில் கோபியிலிருந்து ஈரோடு நோக்கி செல்ல தயாராக இருந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதேபோன்று, காய மடைந்த ஓம்கார் என்பவருக்கு 80 ஆயி ரம் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந் தும், பேருந்திலிருந்து கிழே விழுந்து இறந்த பொங்கியண்ணனின் குடும்பத் திற்கு ரூ.5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்தும் என, மேலும் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது.
வணிக ரீதியாக ஜல்லிக்கட்டு போட்டி: ஆட்சியரிடம் புகார்
தருமபுரி, பிப்.20- வணிக ரீதியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, காளைகளுக்கு கட்டாய பண வசூலிக்கும் முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தரு மபுரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் புகாரளித்தனர். தருமபுரி மாவட்டம், சோகத்தூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், சோகத்தூரில் கடந் தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத் தப்பட்டது. இப்போட்டியில், காளை களின் உரிமையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் தடங்கம் பகுதியில் நடத்தப்பட்ட ஜல் லிக்கட்டு போட்டியின் போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை மாடு முட்டியதில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடப் பாண்டு தருமபுரியில் ஜல்லிக்கட்டு போட் டிகள் நடத்த, சிலர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால், தருமபுரியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை வணிக ரீதி யில் நடத்துகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு காளைக ளுக்கு, கட்டாயப் பண வசூல் செய்வதை தடுத்து நிறுத்தவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலத்தில் ஜவுளிப்பூங்கா: தமிழக பட்ஜெட் அறிவிப்புக்கு வரவேற்பு
நாமக்கல், பிப்.20- சேலம், விருதுநகர் பகுதிகளில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்க ளில் பல்லாயிரக்கணக்கான விசைத் தறிக்கூடங்கள் இயங்கி வருகிறது. இதில், லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் நேரிடையாகவும், மறைமுக மாகவும் பயன்பெற்று வருகின்றனர். ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற காரணங்க ளால் இத்தொழில் கடும் நெருக்க டியை சந்தித்து வந்தது. தொழிலை நடத்த முடியாமல் நூற்றுக்கணக் கான விசைத்தறி கூடங்கள் பூட்டப் பட்டும், இயந்திரங்கள் உடைத்து விற் பனை செய்யப்பட்ட அவலமும் நடந் தேறியது. பொதுவாகவே ஜவுளித் தொழில் இக்காலத்தில் கடும் நெருக் கடியை சந்தித்து வந்த நிலையில், சேலம் மாவட்டத்தை மையப்படுத்தி ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தி ருப்பது ஜவுளித்தொழில் சார்ந்தவர் களிடம் பெரும் வரவேற்பைப் பெற் றுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விசைத் தறி சம்மேளனத் தலைவர் மதிவாணன் விடுத்துள்ள அறிக்கையில், சேலம், விருதுநகர் பகுதிகளில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட் டில் அறிவித்ததை வரவேற்கிறோம். இதனால் ஆயிரக்கணக்கான தொழி லாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஜவுளி ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ஜவுளி தயாரிப்பு தரமும் உயர்த்தப் படும். தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நியோ டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித் துள்ளர்கள். இதனால் உயர்தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படும். இதனால் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏதுவாக அமையும். இந்த பட்ஜெட் வரவேற் கத்தக்க பட்ஜெட் என தெரிவித்துள் ளார்.
பேரூராட்சி உறுப்பினர் தற்கொலை முயற்சி
பேரூராட்சி உறுப்பினர் தற்கொலை முயற்சி சேலம், பிப்.20- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கன்னங் குறிச்சி பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, கன்னங் குறிச்சி பேரூராட்சி 6 ஆவது வார்டு உறுப்பினர் ஈஸ்வரன் (37), தனது வார்டுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிலருடன் வந்தார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கவனித்த அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற னர். ஆனால், போலீசாருடன் செல்ல மறுத்து அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஈஸ்வரன் செய்தியாளர்களி டம் கூறுகையில், தனது வார்டில் தார்சாலை அமைக்க ஒப்பு தல் பெறப்பட்டு, 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பணி கள் தொடங்கவில்லை. இதற்கு முன்னாள் கவுன்சிலர் இடை யூறு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணி களை உடனடியாக தொடங்க வேண்டும் என அவர் வலியு றுத்தியுள்ளார்.
பேருந்து வசதி இல்லாத இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் வேதனை
திருப்பூர், பிப்.20- போதுமான பேருந்து வசதி இல்லாத இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் சென்று வர முடியாமல் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்ற னர். சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கி கல்வி கற்க ஏது வாக காலேஜ் சாலை ஹொசிங் போர்ட் பகுதியில் பி.சி தங்கும் விடுதி செயல் பட்டு வந்தது. கடந்த இரண்டு மாதங்க ளுக்கு முன்பு பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டது. இதையடுத்து அங்கு தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்கள் தங்க ஊத்துக்குளி அருகே மாற்று ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு போது மான போக்குவரத்து வசதி இல்லை, கழிப்பிடம், தங்கும் அறை போதுமான தாக இல்லை என்று மாணவர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறு கையில், நாங்கள் வெளி மாவட்டங் கள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து திருப்பூருக்கு வந்து கல்லூரியில் படித்து வருகின்றோம். வெளியில் அறை எடுத்து தங்க வசதி இல்லாத தால், அரசு தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றோம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு தங்கும் விடுதியில் பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப் போவதாக தெரிவித்தனர். மேலும், ஊத்துக்குளி, குலத்துப்பாளை யம் செக்போஸ்ட் அருகே மாற்று ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரி வித்தனர். இதையடுத்து, நாங்கள் புதி தாக ஏற்பாடு செய்யப்பட்ட தங்கும் விடு திக்கு மாற்றப்பட்டோம். இந்நிலையில், அங்கிருந்து கல்லூரிக்கு தினசரி வந்து செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லை. 100க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளோம். ஒரு அறையில் 25 பேர் வரி தங்கி இருக்கின்றோம். 6 கழிப்பிடங் கள் மட்டுமே உள்ளது. இதனால் தின மும் காலையில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றோம். 3 வேலை உணவு கிடைத்தாலும் தரமானதாக இல்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. காலையில் பேருந்து நிறுத் ததில் வந்து நின்றால் பேருந்துகள் நிற்ப தில்லை. இதனால் குறித்த நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தை கருத் தில் கொண்டு பேருந்து வசதி, தங்கும் இடம் வசதி, தரமான உணவு கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தெரிவித்தனர்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் போராட்டம்
திருப்பூர், பிப்.20- ஒன்றிய அரசு அளித்த வாக்குறு தியை நிறைவேற்ற கோரி தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயி கள் சங்கத்தினர் ரயில் நிலையத்தில் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். வேளான் விளைப் பொருள்களுக்கு ஆதார விலை, விவசாய கடன் தள்ளு படி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத் திருத்த மசோதா ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன் வைத்து தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளு டன் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர் போராட்டம் நடைபெற்று வருகி றது. மேலும், விவசாயிகளின் போராட் டத்தை கலைக்க ஒன்றிய அரசு ராணுவத் தின் மூலம் கண்ணீர் புகைக்குண்டு வீசு தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டதன் விளைவாக ஒரு விவசாயி உயிரிழந்தார். இதற்கு கட் டணம் தெரிவித்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடி யாக நிறைவேற்ற கோரி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அமைப்பினர் திருப்பூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட் டனர்.
ஊராட்சி கூட்டத்திற்கு அழைப்பு இல்லை: துணைத்தலைவர் புகார்
அவிநாசி, பிப்.20- அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவராக செயல்பட்டு வரும் நடராஜ் என்பவர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என செவ்வா யன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார். அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சியில், அதிமுகவை சேர்ந்த துணைத்தலைவர் நடராஜின் செயல் பாடு ஊராட்சி நிர்வாகத்தின் வளர்ச் சிக்கு பாதிப்பதாக உள்ளதாக கூறி திங்களன்று ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட எட்டு உறுப்பினர்கள் மனு அளித் தனர். இதனைத் தொடர்ந்து பழங்கரை ஊராட்சி மன்ற அவசரக் கூட்டம் நடை பெற்று துணைத் தலைவர் நடராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறை வேற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மீண்டும் மனு அளித்தனர். இந்நிலையில் அதிமுக துணைத் தலைவர் நடராஜ் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு அளித்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது, பழங் கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவ ராக பதவி வகித்து வருகிறேன். தற்போது நடைபெற்ற அவசரக் கூட்டத்திற்கு எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. துணைத் தலைவர் காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரம் இக்கூட் டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதுகுறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் அவர்கள் அளித்த தீர்மானத்தின் மீது எந் தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலு வலரிடம் கேட்டபோது, முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உள் ளது. இவர் அளித்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கூறி னார்.
அனுமதி இன்றி தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
உடுமலை, பிப்.20- அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளில் முறையற்ற வகையில் தண்ணீர் எடுத்தால் சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள் ளார். திருப்பூர் மாவட்டம் அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக அமராவதி அணையி லிருந்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. இந்நிலையில், அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளில் முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்ப தைத் தடுக்கும் பொருட்டு நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ஆகிய துறை அலு வலர்கள் அடங்கிய கூட்டு கண்காணிப்புக்குழு அமைக்க உத் தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட கூட்டு கண்காணிப்புக்குழு மூலம் அமராவதி வாய்க்கால்களில் முறையற்ற வகையில் தண்ணீர் எடுப்பது கண்டறியப்பட்டால், தண்ணீர் எடுப்ப வர்கள் மீது காவல் துறையின் மூலம் வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கிணறுக ளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
ரூ.10 நாணயம் - ஆட்சியர் அறிவுரை
ரூ.10 நாணயம் - ஆட்சியர் அறிவுரை சேலம், பிப்.20- பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும், தயக்க மின்றி பத்து ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித் துள்ளார். பத்து ரூபாய் நாணயங்களின் பயன்பாடுகள் தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் களுடனான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சிய ரகத்தில் நடைபெற்றது. அப்போது, அவர் பேசுகையில், இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து வங்கிகளிலும் ஏற்றுக்கொள்ளப் படும் என இந்திய ரிசர்வ் வங்கியால் ஏற்கனவே பலமுறை விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தவறான எண்ணம் இருப்பதால், பத்து ரூபாய் நாணயங்கள் சில இடங்களில் வாங்கப்படுவதில்லை என்ற புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. வங்கியாளர்கள் பொதுமக்கள் அளிக்கும் பத்து ரூபாய் நாணயங்களை எப்போதும் பெற்று வருவதாகவும், பத்து ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என அனைத்து வங்கிகளிலும் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நடத்துநர்கள் பொதுமக்களிடமிருந்து பத்து ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள வேண்டு மெனவும், இதனை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், தனி யார் பேருந்து உரிமையாளர்கள் கண்காணித்து பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்வதை உறுதிபடுத்திட வேண்டுமெனவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பில் ஆங் காங்கே உள்ள கடைகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் அமைத்து பொது மக்கள் வழங்கும் பத்து ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், பேருந்து நடத்துநர்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பத்து ரூபாய் நாணயங்களை எவ் வித தயக்கமின்றி ஏற்றுகொள்ளலாம், என்றார்.
மணமக்கள் நூதன விழிப்புணர்வு
மணமக்கள் நூதன விழிப்புணர்வு நாமக்கல்,பிப். 20- திருமணம் முடிந்தவு டன், கண்தானம், ரத்ததா னத்தை வலியுறுத்தி மாட் டுவண்டியில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி திரும ணக்கோலத்தில் மணமக்கள் சென்ற சம்பவம் அனைவரை யும் கவனத்தையும் ஈர்த்துள் ளது. நாமக்கல் மாவட்டம் ராசி புரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராசி புரம் பகுதியைச் சேர்ந்த விக் னேஷ்க்கும், ஈரோடு மாவட் டம் ஐஸ்வர்யா மீனாட்சி ஆகிய இருவருக்கும் ஞா யிறன்று காலை திருமணம் முடிந்தது. பின்னர், திரும ணம் முடித்தவுடன் இருவ ரும் மணக்கோலத்தில் ராசி புரம் பகுதியில் உள்ள மண மகனின் வீட்டுக்கு இரத்த தானம் மற்றும் கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் மாட்டு வண்டியின் இருபுறமும் பதா கைகள் கட்டி பயணித்தனர். வழக்கமாக திருமண மான மணமக்கள், சொகுசு கார்களில் பயணிப்பது வழக் கம். அவ்வாறு இல்லாமல் நாட்டு மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் கண்தா னம் செய்வோம் ரத்ததா னம் செய்வோம் என்ற பாதா கைகளுடன், “வேளாண்மை இல்லையேல் மேலாண்மை ஏதுமில்லை” என்பதை வலி யுறுத்தி, மணமுடித்த கையோடு மாட்டு வண்டி யில் ஏறி, இராசிபுரம் சேலம் செல்லும் முக்கிய சாலை யில் மணமக்கள் இருவரும் மாட்டு வண்டியை ஒட்டி பய ணித்து அனைவரின் கவனத் தையும் ஈர்த்தனர்.
நிபந்தனையின்றி வங்கிக்கடன் வழங்கிடுக மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்
தருமபுரி, பிப்.20- சுயத்தொழில் துவங்க நிபந்தனையின்றி வங்கிக்கடன் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி தலைமை வகித் தார். அப்போது, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்ய எந்த நிபந்தனையுமின்றி வங்கிக் கடன் வழங்க வேண்டும். மாற்றுத்திறனா ளிகளுக்கான இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் கேட்டு, விண்ணப் பித்தவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக் குமாடி குடியிருப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க தனிவரிசை ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத் தும் போது, அனைத்து துறைசார்ந்த மருத் துவர்கள் பங்கேற்று உரிய பரிசோதனை செய்து, மருத்துவ சான்றிதழ் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளின் அட்டையை ஏஏஒய்க்கு மாற்றம் செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும், என வலியுறுத் தினார். இதற்கு பதிலளித்து பேசிய வரு வாய் கோட்டாட்சியர் காயத்ரி, கோரிக்கை கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் சென்ப கவள்ளி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கார்ல் மார்க்ஸ், கே.சுசிலா, தமிழ் மணி, மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதப்பதட்டம் உருவாக்க முயற்சி அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவு
சேலம், பிப்.20- மதநல்லிணக்கத்தை சீர்குலைக் கும் வகையில் பேசியதாக தொடரப் பட்ட வழக்கில், பாஜக மாநிலத் தலை வர் கே.அண்ணாமலை, மார்ச் 2 ஆம் தேதி ஆஜராக சேலம் குற்றவியல் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துமத கலாசாரத்தை அழிக்கும் நோக்கத்துடன், தீபாவளிப் பண்டி கைக்கு பட்டாசுகளை வெடிக்கக்கூ டாது என கிறிஸ்தவ மிஷனரிகளின் உதவியுடன் உச்சநீதிமன்றத்தில் வழக் குத் தொடரப்பட்டிருப்பதாக பாஜக மாநி லத் தலைவர் கே.அண்ணாமலை யூடி யூப் சேனல் ஒன்றில் பேசியதாக புகார் எழுந்தது. அண்ணாமலையின் இந்தப் பேச்சு, இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப் பதாகக்கூறி, அவர் மீது சமூக ஆர்வ லர் பியூஷ் மானுஷ் வழக்குத் தொடர்ந் திருந்தார். இதுதொடர்பான வழக்கில், அண்ணாமலை நேரில் ஆஜராக சேலம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்த அண்ணாமலை, நீதிமன்றத்தில் ஆஜ ராகும் உத்தரவுக்குத் தடை ஆணை பெற்றதுடன், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியி ருந்தார். இந்த தடை உத்தரவுக்கு எதி ராக சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணா மலை தாக்கல் செய்த மனுவை தள் ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சேலம் ஜே.எம்.4 நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணாமலை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நாச்சிமுத்து ராஜா, வழக்கை மூன்று மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை மார்ச் 2 ஆம் தேதி ஒத்திவைத் ததுடன், அன்றைய தினம் அண்ணா மலை நீதிமன்றத்தில் ஆஜராக வேண் டும் எனவும் உத்தரவிட்டார்.
10 ஆண்டுகளில், 10 பெருமுதலாளிகளை உருவாக்கிய மோடி
10 ஆண்டுகளில், 10 பெருமுதலாளிகளை உருவாக்கிய மோடி தருமபுரி, பிப்.20- கடந்த 10 ஆண்டுகளில், 10 பெருமுதலாளிகளை உரு வாக்கி சாதனை படைத்தது தான் மோடி அரசின் சாதனை என தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி., தெரிவித்துள்ளார். திமுக சார்பில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம், தருமபுரி வள்ளலார் மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் பி.சுப்ர மணி, தலைமை வகித்தார். அப்போது திமுக நாடாளு மன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பேசுகையில், தமிழ்நாட் டில் கடந்த 10 ஆண்டு காலம் இருண்ட காலம். அதேபோல இந்தியாவும் கடந்த 10 ஆண்டுகளாக இருண்டு கிடக்கி றது. சுதந்திர போராட்டத்தின் போது, முதல் உயிர் தியா கம் தமிழ்நாட்டில் தான் தொடங்கியது. தமிழ்நாட்டில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது ஒன்றிய அமைச்சர்கள் வந்து, பார்த்தார்கள். தமிழக முதல்வர் ரூ.30 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டார். ஆனால், ஒன்றிய அரசு எதுவும் கொடுக்க வில்லை. தமிழகம் முழுவதுமாக புறக்கணிக்கப்படுகிறது. கோடிகளில் வரி வசூல் மட்டும் செய்யும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு தொழிற்சாலை யைகூட துவங்கவில்லை. வெளிநாட்டில் இருந்து கருப்புப்ப ணம் கொண்டு வருகிறேன் என்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, அதை இப்பொழுது அவரே மறந்துவிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் 10 பெருமுதலாளிகளை உருவாக்கி யதுதான் மோடி அரசின் சாதனை. மக்களுக்கு பயனாக இருந்த எல்ஐசி பணத்தை அதானிக்கு தொழில் முதலீட்டுக் காக கொடுத்துவிட்டனர். தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக் கப்பட்டு வருகிறது. எனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் வேண் டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் பி.பழனியப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தொழில்நுட்ப பரிவு மாநிலச் செயலாளர் தருண், மாவட்ட அவைத்தலைவர்கள் சி.செல்வராஜ், மனோ கரன், மாவட்டப் பொருளாளர் தங்கமணி, நகரச் செயலா ளர் நாட்டான் மாது உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மாவட்ட துணைச்செயலாளர் ஆ.மணி நன்றி கூறி னார்.