districts

img

நொய்யல் ஆற்றில் இரவு நேரத்தில் திறந்து விடப்படும் சாயக்கழிவு நீர்

திருப்பூர், ஜன.29 - திருப்பூர் நொய்யல் ஆற்றில் இரவு நேரத்தில் சாயக்கழிவு நீர் திறந்து விடப்படுவதை தடுத்து நிறுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழலியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூரில் செயல்பட்டு வரும்  சாய ஆலைகள் கழிவுகளை முழுமையாக சுத்திகரிப்பு செய்து  அந்த நீரை மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஜீரோ டிஸ்சார்ஜ் முறை பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலக்கப்படாமல் தடுக் கப்படுகிறது. பெரிய அளவில் செயல்படும் சாய ஆலைகள் இந்த  முறையில் சுத்திகரிப்பு செய்து வரும் நிலையில், சிறிய நிறுவ னங்கள் சாயக்கழிவு நீரை சுத்தி கரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் இரவு நேரத்தில் திறந்து   விடுவதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் தண்ணீரில் நிறம்  தெரியாது என்பதால் சாயக்கழிவு களை வெளியேற்றி வருவதாகக்  கூறப்படுகிறது. இந்நிலையில் சனியன்று இரவு  திருப்பூர் ஈஸ்வரன் கோவில் பாலம்  அருகே யூனியன் மில் சாலையில் இருந்து நொய்யலில் சாயக்கழிவு நீர் கலந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற நபர் வீடியோவாக எடுத்து பதி விட்டார். இந்த வீடியோ வைரலாக  பரவி வரும் நிலையில் நொய்யல்  ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை  தடுக்கவும், இந்த சட்ட விரோத  செய்கையில் ஈடுபடுவோர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று சுற்றுப்புற சூழல் ஆர்வ லர்கள் வலியுறுத்தியுள்ளனர்-