குடிபோதையில் தீக்குளித்த மசாஜ் தொழிலாளி பலி
பென்னாகரம், ஜூலை 7- பென்னாகரம் அருகே உள்ள குடிபோதையில் மசாஜ் தொரிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக் கல் இந்திரா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (33). மசாஜ்தொழிலாளி. இவரது மனைவி சத்யா இவர்க ளுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கோவிந்தராஜ் கடந்த 24 ஆம் தேதி தனது மோட்டார் சைக்கி ளில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்த ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவ மனைக்கு அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் புதனன்று சிகிச்சை பல னின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஒகே னக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தூக்கிட்டு பெண் தற்கொலை
கோவை, ஜூலை 7- கோவை சுங்கம் பகுதியை அடுத்த ரெட் பீல்ட் சாலையில் உள்ள தனியார் கல்லூரி விடுதி முன்பு பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. கோவை ரெட் பீல்ட் சாலையில் தனியார் கல்லூரி விடுதி அருகே சாலையோரத்தில் உள்ள வேப்ப மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி பந்தயசாலை போலீசாருக்கு தகவல் தெரிவித் துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து
கோவை, ஜூலை 7- கோவை சுந்தராபுரம் பகுதியை அடுத்துள்ள குறிஞ்சி குளத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் இரு வர் படுகாயமடைந்தனர். கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் மேகநாதன் (26). வியாழனன்று அதிகாலை மேகநாதன் மற் றும் கிளீனர் செந்தில்குமார் லாரியில் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கோவிந்த ராஜ் (27), என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி மீது மேகநாதன் ஓட்டி வந்த லாரி குறிஞ்சி குளம் அருகே நேருக்கு நேர் மோதியது. இதில் டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் கோவிந்த ராஜூக்கு, மேகநாதன் மற்றும் கிளீனர் செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்தனர். இதைக்கண்டு அக்கம் பக்கத்தி னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காயமடைந்தவர் களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் தெரி விக்கப்பட்டதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர் கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையின் நடுவே இருந்த 2 லாரிகளையும் அப்புறப் படுத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி அதிகரிப்பு ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி
கோவை, ஜூலை 7- தமிழகத்தில் காற்று சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஜூலை 4 ம் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திதுறை முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15-ந் தேதி காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் தொடங்கியுள்ளது. காற்று சீசன் தொடங்கியுள்ள காரணத்தால் தினமும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், காற்று சீசன் தமிழகத்தில் தொடங்கியுள்ள காரணத்தால் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து வருகிறது. ஜூலை 4ம் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் ஒரே நாளில் அதிக மின்சாரம் 4ஆம் தேதி உற்பத்தி செய்யப்பட்டது. ஜூலை 3-ந் தேதி ஒரே நாளில் 10.4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தின் தினசரி மின் தேவையில் காற்றாலைகள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்க தொடங்கியுள்ளன. ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழ்நாடு மின்வாரியம் பெற்று கொள்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.
தருமபுரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரி, ஜூலை 7- தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (ஜூலை 8) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் தனியார் துறை நிறுவ னங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக், போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப் படிப்பு உள்ளிட்ட அனைத்துவித கல்வித்தகுதிக்கும் வேலை வாய்ப்பு உள்ளதாகவும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் வெள்ளியன்று (ஜூலை 8) காலை 10.00 மணியளவில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகா மில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமுஎகச மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு நன்றி அறிவிப்பு
திருப்பூர், ஜூலை 7- தமுஎகச திருப்பூர் மாவட்ட 15 ஆவது மாநாட்டு வரவேற்பு குழு நன்றி அறிவிப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற் றது. திருப்பூர் கே.ஆர்.சி சிட்டி சென்டரில், வரவேற்புக்குழு தலைவர் அம்மன் பேசன் சிவகுமார் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ஈஸ்வரன், மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பொருளாளர் என்.ராமசாமி, மாநி லக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம் உள்பட மாவட்டக் குழு, வரவேற்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துவக்கத்தில் கவிஞர் பாரா, ஆசிரியர் ஜெயலட்சுமி ஆகி யோர் கவிதை வாசித்தனர் து.சே பிரபாகர் பாடல் பாடினார். மாநாட்டை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் இக்கூட் டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் திருப்பூர், ஜூலை 7- தமிழகத்தில் அரசாணை எண் 149 மறு நியமன தேர்வு மற்றும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக வியாழக்கிழமை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராள மானோர் விண்ணப்பித்து உள்ளனர். இச்சூழலில் ஏற்கனவே பயிற்சி முடித்த தங்களுக்கு இதுவரை பணி வழங்கப்படாத நிலையில், தமிழக அரசு உடனடியாக தற்காலிக ஆசி ரியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முன்னுரிமை அடிப்ப டையில் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல்
திருப்பூர், ஜூலை 7– திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ் தொகுதி மேம் பாட்டு நிதி ரூ.1 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணி களுக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. காலேஜ் ரோடு ஐயப்பன் கோவில் முன்பு ரூ.31.50 லட்சம் மதிப்பில் நிழற்கூரை அமைப்பு, கேவிஆர் நகரில் ரூ.12 லட்சத் தில் அங்கன்வாடி கட்டிடம், ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் எம்எல்ஏ க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தென்மேற்கு பருவ மழை
திருப்பூர் ஜுலை 7- உடுமலை சுற்றுப்பகுதிக ளில் தென்மேற்கு பருவ மழை சீசன், ஜூன் மாதத்தில் துவங்குவது வழக்கம். இந் தாண்டு கோடை காலத்தில் பெய்த மழையால், மானா வாரி சாகுபடிக்கான விதைப்பை விவசாயிகள் மேற்கொண்டனர். இந்நிலை யில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பரவலாக பருவமழை பெய்யத்துவங் கியுள்ளது. இருப்பினும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரம டையவில்லை.அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், விரை வில் மழை தீவிரமடையும் என்ற எதிர்பார்ப்பில் விவசா யிகள் உள்ளனர்.