districts

எழுத்தாளர்களுக்கு கனவு விருது

திருப்பூர், ஜன.15- திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் வெள்ளியன்று  கனவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா விற்கு மக்கள் மாமன்றம் தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் திருப்பூர் எழுத்தாளர்கள் ரத்தி னமூர்த்தி. எஸ்.ஏ.காதர், து.சோ. பிரபாகரன் ஆகியோருக்கு  கனவு விருது வழங்கப்பட்டது. இவ்விருதை மூவருக்கும் சுப்ரபாரதிமணியன் வழங்கினார். முன்னதாக, 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தமிழன்னை சிலை அங்கு  திறக்கப்பட்டது.